NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உ.பி.யில் கொடூரம்; சிறுவர்களை சிறுநீர் குடிக்க வைத்து ஆசனவாயில் மிளகாயை தேய்த்த கும்பல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உ.பி.யில் கொடூரம்; சிறுவர்களை சிறுநீர் குடிக்க வைத்து ஆசனவாயில் மிளகாயை தேய்த்த கும்பல்
    சிறுவர்களை சிறுநீர் குடிக்க வைத்து ஆசனவாயில் மிளகாயை தேய்த்த கும்பல்

    உ.பி.யில் கொடூரம்; சிறுவர்களை சிறுநீர் குடிக்க வைத்து ஆசனவாயில் மிளகாயை தேய்த்த கும்பல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 06, 2023
    03:53 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் இரண்டு சிறுவர்களை சிறுநீர் குடிக்க வைத்து, அவர்களின் ஆசனவாயில் மிளகாயை தேய்த்த கொடூர சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    10 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்கள் பணத்தை திருடியதாக கூறி இந்த கொடூரம் அரங்கேற்றப்பட்டதோடு, சிறுவர்களுக்கு அடையாளம் தெரியாத சில ஊசிகளையும் வலுக்கட்டாயமாக செலுத்தியுள்ளனர்.

    ஆகஸ்ட் 4 ஆம் தேதி சித்தார்த்நகர் மாவட்டத்தின் பத்ரா பஜார் காவல் நிலையப் பகுதியின் கொங்கட்டி சௌராஹாவுக்கு அருகிலுள்ள அர்ஷன் சிக்கன் என்ற கடையில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

    மேலும் சம்பவம் குறித்த சில காணொளிகளும் வெளியாகி வைரலானது.

    polices arrested 6 involved

    ஆறு பேரை கைது செய்தது உத்தரபிரதேச காவல்துறை

    சம்பவம் தொடர்பாக வெளியான ஒரு காணொளியில். சிறுவர்கள் மிளகாயை சாப்பிட்டு, பாட்டிலில் நிரப்பப்பட்ட சிறுநீரை விழுங்குவதைக் காட்டியது.

    மேலும் அங்கிருந்த ஒரு கும்பல் அதைச் செய்யவில்லை என்றால் அடித்து விடுவோம் என்று மிரட்டுவதும் அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.

    இது தொடர்பான மற்றொரு காணொளியில், சிறுவர்கள் தரையில் முகம் குப்புறக் கிடப்பதைக் காட்டுகிறது.

    அதில் அவர்களின் கைகள் முதுகுக்குப் பின்னால் கட்டப்பட்டு, கால்சட்டை கீழே இழுக்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு நபர் அவர்களின் ஆசனவாயில் பச்சை மிளகாயைத் தேய்ப்பதும், வலியால் அலறிக்கொண்டிருந்த சிறுவர்களுக்கு மஞ்சள் நிற திரவம் ஊசி மூலம் செலுத்தப்படும் பதிவாகியுள்ளது.

    காணொளி வைரலாக பரவிய நிலையில், துரிதமாக செயல்பட்ட சித்தார்த்நகர் காவல்துறை, இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரப்பிரதேசம்
    இந்தியா

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்

    உத்தரப்பிரதேசம்

    தேசிய கீதத்திற்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள்; நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் இந்தியா
    கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை - சிறையில் கொடுமை கேரளா
    ராமர் சிலை செதுக்குவதற்காக நேபாளத்தில் இருந்து வந்த அரிய வகை பாறைகள் இந்தியா
    உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் இந்தியா

    இந்தியா

    27 நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள்,  3 ஆட்சிக் கவிழ்ப்பு; பாராளுமன்றத்தின் கடந்த கால வரலாறு  மக்களவை
    இந்தாண்டு இறுதிக்குள்ளேயே இந்தியா- பிரிட்டன் இடையிலான FTA கையெழுத்தாக வாய்ப்பு பிரிட்டன்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 29 தங்கம் வெள்ளி விலை
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025