Page Loader
மத்தியப் பிரதேச முதல்வரின் வாகனங்களில் டீசலுக்குப் பதிலாக தண்ணீரை நிரப்பிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்! 
19 வாகனங்களில் டீசலுக்குப் பதிலாக தண்ணீர் நிரப்பப்பட்டு, பழுதானது

மத்தியப் பிரதேச முதல்வரின் வாகனங்களில் டீசலுக்குப் பதிலாக தண்ணீரை நிரப்பிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்! 

எழுதியவர் Venkatalakshmi V
Jun 27, 2025
06:07 pm

செய்தி முன்னோட்டம்

மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவின் Convoy-இல் இருந்த 19 வாகனங்களில் டீசலுக்குப் பதிலாக தண்ணீர் நிரப்பப்பட்டு, என்ஜின் பழுதாகி, தள்ளி செல்லப்பட்ட ஒரு வினோதமான சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளது. ம.பி..,யில் உள்ள ரத்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பம்பில் நேற்று இரவு இந்த நிகழ்ச்சி நடந்த நிலையில், அதன் CCTV காட்சிகள் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை ரத்லம் மாவட்டத்தில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொள்ளவிருந்ததால், வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பணியின் போது இது நடந்துள்ளது. கலப்பட டீசல் நிரப்பட்ட எஸ்யூவிகளை ஓட்டுநர்கள் மற்றும் பெட்ரோல் பம்ப் ஊழியர்கள் தள்ளி சென்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விவரங்கள்

எப்படிக் குழப்பம் ஏற்பட்டது

இந்தூரிலிருந்து வந்த வாகனங்கள், ரட்லமில் உள்ள பெட்ரோல் பம்பில் எரிபொருள் நிரப்பப்பட்டவுடன் பழுதடைந்தன. "நாங்கள் இந்தூரிலிருந்து பயணித்ததால், டீசல் அளவு குறைவாக இருந்தது, எனவே எரிபொருள் நிரப்ப இந்த பாரத் பெட்ரோலியம் பம்பிற்கு வந்தோம்," என்று ஒரு ஓட்டுநர் கூறினார். "எரிபொருள் நிரப்பிய பிறகு, சில வாகனங்களை முன்னால் அனுப்பினோம். சிலர் நிலையத்தை விட்டு வெளியேற முடிந்தது. ஆனால் சிறிது நேரத்திலேயே நெடுஞ்சாலையில் நின்றார்கள், மற்றவை சில மீட்டர்கள் நகர்ந்த பிறகு இங்கேயே பழுதடைந்தன," என்று அவர் மேலும் கூறினார்.

பம்ப் மூடல்

பெட்ரோல் பம்ப் சீல் வைக்கப்பட்டுள்ளது

இந்த பம்பில் ஒவ்வொரு 20 லிட்டர் டீசலிலும் சுமார் 10 லிட்டர் தண்ணீர் கலந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தை அடுத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு மற்றும் வழங்கல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். எரிபொருள் மாசுபாடு காரணமாக அவர்கள் பெட்ரோல் பம்பை சீல் வைத்தனர். மாசுபட்ட எரிபொருளின் மாதிரிகளை சேகரித்த பிறகு, உணவு மற்றும் குடிமை விநியோகத் துறை பின்னர் டீசலில் தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்தியதாக NDTV அறிக்கை தெரிவித்துள்ளது.