NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 2 பேருக்கு மறுவாழ்வு அளித்த 18 மாத குழந்தை!
    இந்தியா

    2 பேருக்கு மறுவாழ்வு அளித்த 18 மாத குழந்தை!

    2 பேருக்கு மறுவாழ்வு அளித்த 18 மாத குழந்தை!
    எழுதியவர் Sindhuja SM
    Jan 07, 2023, 05:00 pm 0 நிமிட வாசிப்பு
    2 பேருக்கு மறுவாழ்வு அளித்த 18 மாத குழந்தை!
    18 மாத குழந்தையின் உடல் உறுப்புகளால் 2 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்

    தமிழ்நாட்டில் முதல்முறையாக 18 மாத குழந்தையின் உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2ஆம் தேதி ஆந்திரா மாநிலம் நெல்லூரை சேர்ந்த தம்பதியினர் தங்கள் 18 மாத ஆண் குழந்தையை சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த குழந்தை மேஜையின் மீது ஏறி விளையாடும் போது தலையில் பலத்த அடிபட்டதால் ஆந்திராவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அதுவரை சிகிச்சை பெற்று வந்தது. ஆனால், அதன் பின்னும் குழந்தையின் உடல்நிலை மோசமாகி கொண்டே இருந்ததால் குழந்தையை சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    குறைந்த வயது உறுப்பு கொடையாளர்:

    இந்நிலையில், கடந்த 5ஆம் தேதி சிகிச்சை பெற்று வந்த குழந்தைக்கு மூளை சாவு ஏற்பட்டது. இதனையடுத்து, பெற்றோர்கள் அனுமதியோடு அந்த குழந்தையின் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகிய உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டன. பெறப்பட்ட கல்லீரல் மதுரையில் சிகிச்சை பெற்று வரும் 4 மாத பெண் குழந்தைக்கும் சிறுநீரகங்கள் வேலூரில் சிகிச்சை பெற்று வரும் 19 வயது பெண்ணுக்கும் பொருத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் மிக குறைந்த வயது உறுப்பு கொடையாளராக தற்போது இந்த குழந்தை கருதப்படுகிறது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சில வருடங்களுக்கு முன் ஒரு இரண்டரை வயது குழந்தையின் உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டன. இரண்டரை வயதுக்கும் குறைவான குழந்தையின் உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்படுவது தமிழகத்தில் இதுவே முதல் முறை.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஆயிரக்கணக்கான தலித் பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிய 'சிறுதானிய மனிதர்' இந்தியா
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் ராமநாதபுரம்
    மகளிர் ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி : முதல் பட்டத்தை வெல்லப்போவது யார்? மகளிர் ஐபிஎல்
    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது! வைரல் செய்தி

    தமிழ்நாடு

    திருச்சியில் ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்தவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை திருச்சி
    அடுத்த 5 நாட்களுக்கு தொடர் மழை: எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் புதுச்சேரி
    இதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட தலைவர்கள்: இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை இந்தியா
    பத்மஸ்ரீ விருது பெற்ற பாம்புப்பிடி வீரர்கள் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர் பத்மஸ்ரீ விருது

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023