NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆந்திர மாநிலம் நெல்லூரில் 144 தடை உத்தரவு
    ஆந்திர மாநிலம் நெல்லூரில் 144 தடை உத்தரவு
    இந்தியா

    ஆந்திர மாநிலம் நெல்லூரில் 144 தடை உத்தரவு

    எழுதியவர் Nivetha P
    September 10, 2023 | 05:18 pm 1 நிமிட வாசிப்பு
    ஆந்திர மாநிலம் நெல்லூரில் 144 தடை உத்தரவு
    ஆந்திர மாநிலம் நெல்லூரில் 144 தடை உத்தரவு

    ஆந்திரா முன்னாள்-முதல்வரும், தெலுங்குதேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று(செப்.,9)காலை கைது செய்யப்பட்டார். கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019வரை முதல்வர் பதவி வகித்த சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருக்கும் பொழுது திறன் மேம்பாட்டுத்துறையில் ஊழல் செய்துள்ளதாக புகார்கள் எழுந்தது. ரூ.550கோடி வரை அவர் ஊழல் செய்துள்ளார் என்றும் அந்த புகார்களில் கூறப்படுகிறது. இந்த புகார்களின் அடிப்படையில் கடந்த சில வருடங்களாக சிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே ஆளும்கட்சிக்கு எதிராக அவர் பேருந்தில் ஊர்ஊராக சென்று மக்களை திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அதன்படி நேற்று முன்தினம் நந்தியாலா மாவட்டத்தில் ஓர் பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய அவரை சிஐடி போலீசார் அதிரடியாக அவரது வீட்டில் வைத்து நேற்று கைது செய்தனர்.

    கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனுதாக்கல்

    பின்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, விஜயவாடாவில் உள்ள சிஐடி அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரிடம் இந்த ஊழல் விவகாரம் குறித்து பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று(செப்.,10) காலை அவர் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இவரை தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மாநில குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை மனுதாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள காவல்துறை, நெல்லூர் மாவட்டம் முழுவதும் மற்றும் கோதாவரி மாவட்ட ராஜமுந்திரி பகுதிகளிலும் 144 தடை உத்தரவினை பிறப்பித்துள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஆந்திரா
    கைது
    காவல்துறை
    காவல்துறை

    ஆந்திரா

    ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் சிஐடி
    சந்திரபாபு நாயுடு ஏன் கைது செய்யப்பட்டார்? முழு விவரம்  அமலாக்க இயக்குநரகம்
    ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது  காவல்துறை
    திருப்பதி ஏழுமலையானுக்கு 108 தங்க தாமரைகள் நன்கொடை  திருப்பதி

    கைது

    தெலுங்கு தேசக்கட்சியினர் போராட்டம் - ஆந்திராவில் நிலவும் பதற்றம் சிஐடி
    ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார் செந்தில் பாலாஜி  செந்தில் பாலாஜி
    கொல்கத்தா: 10 ஆண்டுகளாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குழந்தை பராமரிப்பு இல்ல இயக்குனர் கைது பலாத்காரம்
    7 முறை கருக்கலைப்பு புகார் எதிரொலி:  விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை நாம் தமிழர்

    காவல்துறை

    பட்டுக்கோட்டையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாய், சேய் இருவரும் பலி  குழந்தைகள்
    பாலியல் பலாத்கார வழக்கு - சீமான் நேரில் ஆஜராக காவல்துறை அழைப்பாணை  காவல்துறை
    பல்லடம் கொலை சம்பவத்தில் உயிரிழந்தோர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு கொலை
    பல்லடம் கொலை சம்பவம்: CCTV -யில் சிக்கிய முக்கிய குற்றவாளி வெங்கடேஷ் கொலை

    காவல்துறை

    அயர்லாந்தில் இருந்து ரூ.9,000 கோடி பணம் வருவதாக கூறி தொழிலதிபர்களிடம் பணம் பறிப்பு - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    திருவண்ணாமலை கிரிவலப்பாதை - குற்றப்பின்னணியுள்ள சாமியார்களை கண்டறியும் பணி திருவண்ணாமலை
    பள்ளி பேருந்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன் போக்சோவில் கைது டெல்லி
    ராஜஸ்தானில் பெண்ணை நிர்வாணப்படுத்தி இழுத்து சென்ற கணவர் கைது - அதிர்ச்சி சம்பவம் ராஜஸ்தான்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023