NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மத்திய அரசுக்கு எதிராக 14 கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
    மத்திய அரசுக்கு எதிராக 14 கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
    இந்தியா

    மத்திய அரசுக்கு எதிராக 14 கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

    எழுதியவர் Nivetha P
    April 05, 2023 | 08:17 pm 0 நிமிட வாசிப்பு
    மத்திய அரசுக்கு எதிராக 14 கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
    மத்திய அரசுக்கு எதிராக 14 கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

    சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 14 கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதன்படி இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் ஜே.பீ.பர்திவாலா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, 2013 முதல் தற்போது வரை வழக்குகள் பதிவது 600% உயர்ந்துள்ளது. இதில் பெரும்பான்மை எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிரானது என்று கூறி அதற்கான தரவுகளையும் தாக்கல் செய்தார். இதன்மூலம் எதிர்கட்சிகளை செயல்படவிடாமல் முடக்கி, வழக்குகளின் பின்னால் அலைய வைக்கிறது. இதனால் எதிர்கட்சிகளின் ஜனநாயக செயல்பாடுகள் முடக்கப்படுகிறது என்று கூறி வாதிட்டார்.

    பொதுமக்களுக்கு உள்ள அதே சட்ட உரிமைகள் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளுக்கும் உள்ளது

    மேலும் அவர் 95% வழக்குகள் எதிர்க்கட்சி தலைவர்கள் மீது தான் பதிவாகியுள்ளது என்றும் வாதிட்டார். இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொதுமக்களுக்கு உள்ள அதே சட்ட உரிமைகள் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளுக்கும் உள்ளன. தனிப்பட்ட முறையிலோ, குழுக்களாகவோ குறிப்பிட்ட பிரச்சனைகளை சுட்டிக்காட்டி மனுக்கள்தாக்கல் செய்யப்பட்டால் அதுகுறித்து நீதிமன்றம் விசாரிக்க தயாராக உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பொதுவான உத்தரவு பிறப்பிக்கும் வகையில் வழக்கை விசாரிப்பது இயலாது என்றும் கூறினர். அதன்படி தற்போது அந்த மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    மத்திய அரசு
    உச்ச நீதிமன்றம்

    மத்திய அரசு

    கச்சா எண்ணெய் வரியை ரத்து செய்த மத்திய அரசு - யாருக்கு லாபம்? தொழில்நுட்பம்
    வாகன ஸ்கிராப்பிங் 11,000 வாகனங்கள் ரத்து - வெளியிட்ட அரசு! போக்குவரத்து காவல்துறை
    தொழில் முனைவோர் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம்: 40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! அரசு திட்டங்கள்
    மத்திய அரசால் 'மீடியாஒன்' சேனலின் மீது போடபட்டிருந்த தடை ரத்து: உச்ச நீதிமன்றம் இந்தியா

    உச்ச நீதிமன்றம்

    ராகுல் காந்தி தகுதி நீக்கத்தினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு ராகுல் காந்தி
    உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளை பயன்படுத்த வேண்டாம் என்பது உச்சநீதிமன்ற முடிவு - மத்திய அமைச்சர் விளக்கம் மத்திய அரசு
    4 நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு செய்ய உச்ச நீதிமன்றம் பரிந்துரை இந்தியா
    7 வயது சிறுவனை கடத்தி கொன்ற வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை ரத்து இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023