NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கர்மவீரர் காமராசரின் 121வது பிறந்தநாள் கொண்டாட்டம் - மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கர்மவீரர் காமராசரின் 121வது பிறந்தநாள் கொண்டாட்டம் - மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை 
    கர்மவீரர் காமராஜரின் 121வது பிறந்தநாள் கொண்டாட்டம் - மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

    கர்மவீரர் காமராசரின் 121வது பிறந்தநாள் கொண்டாட்டம் - மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை 

    எழுதியவர் Nivetha P
    Jul 15, 2023
    12:34 pm

    செய்தி முன்னோட்டம்

    விருதுநகர் மாவட்டம் 1903ம்ஆண்டு ஜூலை 15ம் தேதி குமாரசாமி மற்றும் சிவகாமி அம்மாளுக்கு பிறந்தவர் தான் காமராசர்.

    1954ம் ஆண்டு தமிழக முதல்வராக பதவியேற்ற காமராசர், 9ஆண்டுகள் பதவியில் நீடித்தார்.

    ஏழைக்குடும்பத்தினை சேர்ந்த குழந்தைகளும் படிக்கவேண்டும் என்னும் எண்ணத்தில் பள்ளி குழந்தைகளுக்கு மதியஉணவு திட்டத்தினை அறிமுகப்படுத்தினார்.

    நேர்மை மற்றும் எளிமைக்கு இலக்கணமாக விலங்கிய இவர், கல்விக்கண் திறந்தவர், படிக்காதமேதை, தென்னாட்டு காந்தி, பெருந்தலைவர், கருப்பு காந்தி என்னும் பெயர்களால் மக்களால் புகழப்பட்டவர்.

    காங்கிரஸ் கட்சியில் தனது 16வது வயதில் உறுப்பினராக இணைந்த இவர், டாக்டர் வரதராஜுலு நாயுடு என்பவர் மூலம் 1919ம் ஆண்டு முதல் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார்.

    கிராமங்கள் தோறும் பல துவக்கப்பள்ளிகளை திறந்துவைத்து கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சியினை உருவாக்கினார்.

    காமராஜர் 

    விவசாயம், தொழில் துறைகளில் மறுமலர்ச்சியினை கொண்டு வந்தவர் 

    விவசாயம்,தொழில் உள்ளிட்டத்துறைகளில் பெரும் வளர்ச்சியினை கொண்டுவர அயராது முயற்சிகளை மேற்கொண்ட காமராசர், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அணைகளை கட்டி விவசாயத்திற்கு பாசனவசதிகளை ஏற்படுத்தினார்.

    முதல்வராக பதவியேற்றவுடனே துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டார்.

    பின்னர் உயர்நிலை பள்ளி ஆசிரியர்கள், தனியார் கல்லூரி ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கும் ஓய்வூதியம் வழங்க ஆணையிட்டார்.

    இத்தனை சாதனைகளைப்புரிந்த இவர் அக்டோபர் 2-1975ம்ஆண்டு உயிரிழந்தார்.

    இந்நிலையில் இன்று(ஜூலை.,15)இவருடைய பிறந்தநாளினை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை நங்கநல்லூர் நேரு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு காமராசரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    மேலும் தனக்கு வழங்கப்பட்ட 7,740புத்தகங்களை அரசு பொதுநூலகத்திற்கு வழங்கினார்.

    தொடர்ந்து, பொதுத்தேர்வுகளில் சிறப்பிடத்தினை பெற்ற மாணவ-மாணவியருக்கு ஊக்கத்தொகையினையும் வழங்கினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க ஸ்டாலின்
    காங்கிரஸ்
    விருதுநகர்
    ஓய்வூதியம்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    மு.க ஸ்டாலின்

    தமிழ்நாடு டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி - ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு
    கிண்டி மருத்துவமனை: முதலமைச்சர் ஸ்டாலின் திறக்கப்போகிறாரா? திரௌபதி முர்மு
    தமிழர் பிரதமரானால் மகிழ்ச்சி, தமிழிசைக்கு வாய்ப்பு கொடுக்கலாம் - மு.க.ஸ்டாலின்  அமித்ஷா
    இந்தி மொழியினை திணிப்பதிலேயே மத்திய அரசு தீவிரம் காட்டிவருகிறது - முதல்வர் குற்றச்சாட்டு  மத்திய அரசு

    காங்கிரஸ்

    சில செய்தி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு உறுதி - டி.கே.சிவகுமார் பேட்டி  பாஜக
    சித்தராமையா Vs டிகே.சிவகுமார் பிரச்சனை: கர்நாடகாவில் ஆட்சி காலம் இரண்டாக பிரிக்கப்படுமா  இந்தியா
    கர்நாடக முதல்வரை தேர்ந்தெடுக்கும் பிரச்சனை: இன்று என்ன நடந்தது இந்தியா
    கர்நாடகா முதல்வராகிறார் சித்தராமையா - காங்கிரஸ் தலைமை முடிவு கர்நாடகா

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் - நம் முன்னோர்கள் விட்டு சென்ற ஆயிரக்கணக்கான பொக்கிஷங்கள் மாவட்ட செய்திகள்
    சதுரகிரி மலையில் உள்ள சிறப்புமிக்க மருத்துவ குணமிக்க நாவல் நீரூற்று நீரிழிவு நோய்
    தமிழகத்தில் முதன்முறையாக வருகிறது பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா - விருதுநகரில் அமைகிறது தமிழ்நாடு
    மூலிகை பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.15க்கு வழங்குவேன் - ராமர் பிள்ளை  தமிழ்நாடு

    ஓய்வூதியம்

    ஏப்ரல் 1 முதல் புதிய NPS விதி: ஓய்வூதியம் மொத்த தொகையை பெற இதை செய்திடுங்கள் இந்தியா
    ஆயுள் காப்பீடு எடுப்பவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? தொழில்நுட்பம்
    புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதிய முறைக்கு மாற்றம்-அறிக்கையளிக்க தமிழக அரசு உத்தரவு தமிழ்நாடு
    2022-23 வரி சேமிப்பு முதலீடு திட்டம் - NPS எப்படி உதவும் தெரியுமா? கடன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025