மாதம் ரூ.71ஆயிரம் வரை சம்பளம் : மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 காலியிடங்கள்
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கீழ் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1. நகல் பரிசோதகர்(Examiner) 2. நகல் வாசிப்பாளர்(Reader) 3. முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர்/இளநிலை கட்டளை நிறைவேற்றுனர்(Junior Bailiff) 4. கட்டளை பணியாளர்(Process Server) 5. கட்டளை எழுத்தர்(Process Writer) 6. ஒளிப்பட நகல் எடுப்பவர்(Xerox Operator) 7. ஓட்டுநர்(Driver) 8. நகல் பிரிவு உதவியாளர்(Copyist Attender) 9. அலுவலக உதவியாளர்(Office Assistant) 8. தூய்மைப் பணியாளர்(Cleanliness Worker) 9. தோட்டப் பணியாளர்(Gardener) 10. காவலர்/இரவு காவலர்(Watchman) 11. இரவு காவலர் மற்றும் மசால்ஜி(Nightwatchman-cum-Masaichi) 12. விளம்பரம் காவலர்/மசால்ஜி(Watchman-cum-Masaichi) 13. தூய்மைப் பணியாளர் மற்றும் மசால்ஜி(Cleanliness Worker-cum-Masaichi) 14. வாட்டர்மென்/வாட்டர்வுமன்(Waterman/Waterwoman) 15. மசால்ஜி(Masaichi)
சம்பள விவரங்கள்
இது குறித்து தெரிந்துகொள்ள வேண்டியவை
மேற்குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு ஆட்களை தேடும் பணி தொடங்கியுள்ளது. இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க 10ஆம் வகுப்பு பிடித்திருப்பது அவசியம். மேலும், விண்ணப்பதாரர் 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மூலம் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். இந்த எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற தமிழ் அறிவும் பொது அறிவும் இருப்பது அவசியம். இந்த தேர்வை எழுதுவதற்கு 550 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். SC, SC(A), ST, மாற்று திறனாளிகள் மற்றும் விதவைகள் கட்டணம் செலுத்த தேவையில்லை. இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist என்ற இணையதளத்திற்கு சென்று தங்களுடைய மாவட்டத்தை தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கலாம். வரும் மே 27ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.