NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கும்பகோணம் அருகே கி.பி.10ம் நூற்றாண்டு கால தேவி சிலை கண்டெடுப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கும்பகோணம் அருகே கி.பி.10ம் நூற்றாண்டு கால தேவி சிலை கண்டெடுப்பு 
    (மாதிரி புகைப்படம்) கும்பகோணம் அருகே கி.பி.10ம் நூற்றாண்டு மூத்த தேவி சிலை கண்டெடுப்பு

    கும்பகோணம் அருகே கி.பி.10ம் நூற்றாண்டு கால தேவி சிலை கண்டெடுப்பு 

    எழுதியவர் Nivetha P
    Oct 17, 2023
    03:23 pm

    செய்தி முன்னோட்டம்

    கும்பகோணம் அருகேயுள்ள கோனேரிராஜபுரம் என்னும் பகுதியில் கி.பி.10ம் நூற்றாண்டினை சேர்ந்த மூத்த தேவி சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து வட்டார ஆய்வாளரும், கும்பகோணம் மாவட்ட வரலாற்று ஆய்வு சங்க உறுப்பினருமான ஆ.கோபிநாத் செய்தி குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

    அதில், கோனேரிராஜபுரம் திருநல்லம் பகுதியிலுள்ள வரலாற்று ஆய்வாளர் சு.சுவாமிநாதன், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலரான நாராயணன் உள்ளிட்டோர் கொடுத்த தகவலின்பேரில் குறிப்பிட்ட இடத்தில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி கோனேரிராஜபுரத்தின் வடக்கு தெருவில் வயல்வெளி பகுதியில் அமைந்துள்ள ஓர் வாய்க்காலில் கிடந்த கல் ஒன்று எடுக்கப்பட்டு சுத்தம் செய்து பார்த்ததில் அது மூத்த தேவி சிலை என்று கண்டறியப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    கண்டெடுக்கப்பட்ட அமர்ந்து நிலையிலுள்ள மூத்த தேவியின் சிலை மார்புப்பகுதியில் சிதைவுற்றுள்ளது என்றும் கூறப்படுகிறது.

    சிலை 

    வழக்கத்தில் இருந்த வழிபாடு - கல்வெட்டுகள் மூலம் உறுதி 

    மேலும், திருநல்லம் என்று அழைக்கப்படும் இந்த ஊரில் அமைந்துள்ள நடராஜர், உலகம் முழுவதும் பிரசித்திப்பெற்றவர்.

    அக்கோயில் அமைந்துள்ள 1.5கிமீ.,தொலைவிலுள்ள வயல்வெளியில் இருந்துதான் இந்த சிலை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

    சோழர் காலத்து சிலையான இது 3.50 அடி உயரமும், 2.50 அடி அகலமும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த சிலையில் உள்ள மூத்த தேவி வசீகரமான முகம், காதில் குழைகள் அணிந்ததோடு தலையில் மகுடம் கொண்டு கண்டிகை, சரப்பளி, சவுடி உள்ளிட்ட அணிகலன்கள் அணிந்து அழகாக காட்சியளிக்கிறார்.

    இந்த சிலையில் தேவியுடன் மாந்தன் மற்றும் மாந்தி உள்ளிட்டோரும் காட்சியளிக்கின்றனர்.

    பல்லவர்கள் மற்றும் சோழர்கள் காலத்தில் மூத்த தேவி வழிப்பாடு நடைமுறையில் இருந்தது என்பது கல்வெட்டுகள் மூலம் உறுதியாகிறது என்றும் கோபிநாத் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    மின்சார கார் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான புதிய வழிகாட்டுதல் வெளியிட்டது மத்திய அரசு மின்சார வாகனம்
    மணிரத்னம்- கமல்ஹாசனின் 'தக் லைஃப்': கதைக்களம், OTT வெளியீடு மற்றும் பல கமல்ஹாசன்
    மீதமுள்ள எஸ்-400 ஏவுகணை அமைப்புகள் 2026க்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்; ரஷ்யா அறிவிப்பு ரஷ்யா
    ChatGPT பயன்பாட்டில் இந்தியா முதலிடம்! ஓபன்ஏஐ

    உலகம்

    12 கிராமங்களை முற்றிலுமாக அழித்த ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: 2000க்கும் மேற்பட்டோர் பலி ஆப்கானிஸ்தான்
    'இது 9/11 பயங்கரவாத தாக்குதலை போன்றது': ஐநா சபைக்கான இஸ்ரேலிய தூதர் பேச்சு இஸ்ரேல்
    ஹமாஸ் எதற்காக இஸ்ரேலை எதிர்த்து போரிடுகிறது? யார் அதற்கு உதவுகிறார்கள்? இஸ்ரேல்
    வீடியோ: சிறு குழந்தைகள் அடங்கிய ஒரு குடும்பத்தைக் பிணைய கைதிகளாக வைத்திருக்கும் ஹமாஸ் இஸ்ரேல்

    தமிழ்நாடு

    14 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    பாலஸ்தீனியம், இஸ்ரேல் வாழ் தமிழர்களுக்கு உதவி எண்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு இந்தியா
    நாகை- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்துக்கான சோதனை ஓட்டம்தொடங்கியது இலங்கை
    அத்திப்பள்ளி பட்டாசு வெடிப்பு வழக்கு சிஐடிக்கு மாற்றம்- கர்நாடக முதல்வர் சித்தராமையா தகவல் கர்நாடகா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025