NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ்நாட்டில் 10 வாரங்களில் 10 ஆயிரம் மழைக்கால மருத்துவ முகாம்கள் - தமிழக அரசு திட்டம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழ்நாட்டில் 10 வாரங்களில் 10 ஆயிரம் மழைக்கால மருத்துவ முகாம்கள் - தமிழக அரசு திட்டம் 
    தமிழ்நாட்டில் 10 வாரங்களில் 10 ஆயிரம் மழைக்கால மருத்துவ முகாம்கள் - தமிழக அரசு திட்டம்

    தமிழ்நாட்டில் 10 வாரங்களில் 10 ஆயிரம் மழைக்கால மருத்துவ முகாம்கள் - தமிழக அரசு திட்டம் 

    எழுதியவர் Nivetha P
    Oct 25, 2023
    05:57 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் நோய் தொற்று பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும், பரவலை தவிர்க்கவும் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் இன்று(அக்.,25)செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

    அப்போது அவர், மழைக்காலங்களில் தான் தேங்கி நிற்கும் மழைநீரால் கொசு அதிகமாக உற்பத்தியாகும்.

    இதனால் டெங்கு, மலேரியா, டைபாய்டு, தொண்டை வலி, சளி, காலரா உள்ளிட்ட நோய் தொற்றுகளும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.

    தொடர்ந்து அவர், மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் தான் உள்ளது.

    இந்தாண்டு டெங்குவால் 5,600 பேர் பாதிப்படைந்த நிலையில் 492 சிகிச்சை பெற்று வருகிறார்கள். 5 பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிவித்தார்.

    முகாம் 

    தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக 10 வாரங்களில் 10,000 மருத்துவ முகாம்கள்

    வரும் அடுத்த 2 மாதங்களில் இதன் பாதிப்பு மேலும் 2,000 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

    இதனையடுத்து டெங்கு மட்டுமின்றி மலேரியா, காலரா போன்ற நோய் தொற்று பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்படி, வரும் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவங்கி அடுத்த 2 மாதங்களின் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் கிட்டத்தட்ட 1,000 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

    சளி, காய்ச்சல், தலைவலி போன்ற உடல் உபாதைகள் உள்ளோர் இந்த மருத்துவ முகாம்களை பயன்படுத்தி கொண்டு மருத்துவர்களை அணுகி இலவசமாக சிகிச்சை பெறலாம் என்றும் கூறப்படுகிறது.

    10 வாரங்களில் 10,000 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவது என்பது தமிழ்நாடு மாநிலத்தில் இதுவே முதன்முறையாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க ஸ்டாலின்
    டெங்கு காய்ச்சல்
    பருவமழை
    சுகாதாரத் துறை

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    மு.க ஸ்டாலின்

    மகளிர் உரிமைத்தொகைக்கு 1 கோடியே 6 லட்சம் பேர் தேர்வு:  மு.க.ஸ்டாலின் அறிவிப்பு  தமிழ்நாடு
    சென்னையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு  திமுக
    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் - பயனாளிகளுக்கு பிரத்யேக ஏடிஎம் கார்டு  தமிழ்நாடு
    தமிழக மீனவர்கள் 17 பேர் கைது: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின் வெளியுறவுத்துறை

    டெங்கு காய்ச்சல்

    தேசிய டெங்கு தினம் 2023: டெங்கு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்! ஹெல்த் டிப்ஸ்
    டெங்கு தடுப்பூசி: 3வது கட்ட சோதனை விரையில் தொடங்க இருக்கிறது  இந்தியா
    டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - பொது சுகாதாரத்துறை  சென்னை
    கேரளாவில் அதிகரிக்கும் டெங்கு - தமிழகத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்  கேரளா

    பருவமழை

    பருவமழை காலத்தில் ஒரு முறையாவது சென்று பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள்  சுற்றுலா
    41 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் கொட்டி தீர்க்கும் பருவமழை  ஹிமாச்சல பிரதேசம்
    அரிசி ஏற்றுமதி தடை எதிரொலி: தமிழ்நாட்டில் அதிகரித்த விலை  சென்னை
    திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மழை

    சுகாதாரத் துறை

    குட்கா தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு சென்னை உயர் நீதிமன்றம்
    காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடிசா அமைச்சர் நபா கிசோர் தாஸ் மாநிலங்கள்
    கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது கேரளா
    தமிழக சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்க நடவடிக்கை தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025