NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 1000 கலைஞர்கள் ஆடிய வள்ளி கும்மியாட்டம் - தமிழக அரசுக்கு வலியுறுத்தல் 
    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 1000 கலைஞர்கள் ஆடிய வள்ளி கும்மியாட்டம் - தமிழக அரசுக்கு வலியுறுத்தல் 
    இந்தியா

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 1000 கலைஞர்கள் ஆடிய வள்ளி கும்மியாட்டம் - தமிழக அரசுக்கு வலியுறுத்தல் 

    எழுதியவர் Nivetha P
    April 17, 2023 | 06:21 pm 0 நிமிட வாசிப்பு
    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 1000 கலைஞர்கள் ஆடிய வள்ளி கும்மியாட்டம் - தமிழக அரசுக்கு வலியுறுத்தல் 
    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 1000 கலைஞர்கள் ஆடிய வள்ளி கும்மியாட்டம் - தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 1000 கலைஞர்கள் பங்கேற்ற வள்ளி கும்மியாட்டம் அரங்கேறியது. இதனை காண அங்கு குவிந்த மக்கள் கூட்டத்தினை இது வெகுவாக கவர்ந்தது. தாராபுரம் பேருந்து நிலையம் எதிரில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் தான் இந்த பாரம்பரிய வள்ளி கும்மியாட்டம் நடந்தது. வள்ளி கும்மியாட்டம் என்பது தமிழ் கடவுளான முருகனை நாடோடி இனத்தில் பிறந்த வள்ளி விநாயகர் துணையுடன் திருமணம் செய்த நிகழ்வுகளை கலைஞர்கள் இந்த கும்மியாட்டம் மூலம் பாரம்பரிய முறையில் விளக்குவதே ஆகும். முந்தைய காலங்களில், கோயில் திருவிழாக்களில் வள்ளி கும்மியாட்டம் விடிய விடிய நடக்கும். ஆனால் காலப்போக்கில் இந்த கலை அழிய துவங்கியுள்ளது.

    உதவித்தொகையினை வழங்கி பாரம்பரிய கலைகளை காப்பாற்றவேண்டும் 

    அழிந்து வரும் இந்த கும்மியாட்டத்தினை தமிழக அரசு மீண்டும் உயிர்ப்பிக்க நடவடிக்கைகளை எடுக்கவேண்டும், அரசு விழாக்களில் கும்மியாட்டத்தினை நடத்திட முன்வரவேண்டும் என்று கலைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். இந்த கலையினை மீட்டெடுக்கவேண்டும் என்னும் முயற்சியில் கொங்கு மண்டலத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் கும்மியாட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. ஒரு சில ஆசிரியர்கள் இந்த கலையினை இலவசமாகவே இளைய தலைமுறையினருக்கு பயிற்சி அளிக்கிறார்கள். கேரளாவில் செண்டை மேள கலையினை காப்பாற்ற அம்மாநில அரசு அதனை கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கு உதவி தொகையினை வழங்கி வருகிறது. அதே போல் தமிழக அரசும் முன்வந்து இதுபோன்று உதவித்தொகையினை வழங்கி பாரம்பரிய கலைகளை காப்பாற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழக அரசு
    திருப்பூர்
    கேரளா

    தமிழக அரசு

    முதன்முதலாக வந்த பேருந்து சேவை - கொண்டாட்டத்தில் பழங்குடி மக்கள்  மாவட்ட செய்திகள்
    சென்னை கலாஷேத்ரா விவகாரம்-அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  சென்னை
    சென்னையில் தனியார் பராமரிக்கும் கழிவறை குறித்து புகாரளிக்க க்யூ.ஆர். குறியீடு  சென்னை
    'ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை' திட்டம் - தமிழக அரசு எச்சரிக்கை  மத்திய அரசு

    திருப்பூர்

    அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் நீரா பானம் தமிழ்நாடு
    இந்தியாவின் 21 மாநில மக்களின் வாழ்வாதாரமாக திகழும் திருப்பூர் தமிழ்நாடு
    திருப்பூரில் கொரோனாவுக்கு முதியவர் ஒருவர் பலி - மேலும் ஓர் மரணம் கொரோனா
    கோவையில் வெடிகுண்டு புரளி எழுப்பிய நபர் கைது: காரணம் இது தானாம்! சென்னை

    கேரளா

    கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் - தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!  வந்தே பாரத்
    பாட்டிலில் பெட்ரோல் வழங்க தடை - அதிரடி காட்டிய கேரளா அரசு இந்தியா
    கேரளாவில் 100க்கு 97மதிப்பெண்கள் எடுத்த 108 வயதுடைய மூதாட்டி தமிழ்நாடு
    பூட்டான் கல்வி முறையை மாற்ற பாடுபட்ட கேரள ஆசிரியர்கள் பூட்டான்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023