NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியோருக்கு 10 மடங்கு மின்கட்டணம் வசூல் - சென்னை உயர்நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியோருக்கு 10 மடங்கு மின்கட்டணம் வசூல் - சென்னை உயர்நீதிமன்றம்
    அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியோருக்கு 10 மடங்கு மின்கட்டணம் வசூல் - சென்னை உயர்நீதிமன்றம்

    அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியோருக்கு 10 மடங்கு மின்கட்டணம் வசூல் - சென்னை உயர்நீதிமன்றம்

    எழுதியவர் Nivetha P
    Feb 02, 2023
    10:06 pm

    செய்தி முன்னோட்டம்

    திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயலில் நிலத்தை ஆக்கிரமைப்பு செய்து வீட்டை கட்டியுள்ளவர்களை காலி செய்யுமாறு ஆவடி தாசில்தார் நோட்டிஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது.

    அந்த நோட்டீசை ரத்து செய்ய கோரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட மூன்று பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

    இந்த வழக்கு நீதிபதிகள் அமர்வுக்கு முன் இன்று(பிப்.,2) விசாரணைக்கு வந்தது.

    இந்த வழக்கின் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அரசு நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்க ஆக்கிரமிப்பாளருக்கு 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பான சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளார்கள்.

    ஆவடி தாசில்தார்

    ஆக்கிரமிப்பில் உள்ளதா இல்லையா என்பதை கண்டறிய அறிவுறுத்தல்

    மேலும், கருத்து தெரிவித்த நீதிபதிகள் பத்து மடங்கு மின் கட்டணத்தை செலுத்த தயாராக இருப்பதாக மனு தாக்கல் செய்தால், வீட்டை காலி செய்ய பிறப்பித்த நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிப்பதாக மனுதாரர்களுக்கு நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து மனு தாக்கல் செய்யவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

    இதனையடுத்து, பத்து மடங்கு மின்கட்டணத்தை செலுத்த தயாராக இருப்பதாக மனுதாரர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குறிப்பிட்ட அந்த நிலப்பகுதி மட்டும் பட்டா நிலம் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து, அந்த நிலத்தை அளந்து ஆக்கிரமிப்பில் உள்ளதா இல்லையா என்பதை கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்த உத்தரவினை ஆவடி தாசில்தாருக்கு பிறப்பித்த நீதிபதிகள் வழக்கின் விசாரணையை தள்ளிவைத்து உத்தரவு பிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை உயர் நீதிமன்றம்
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    சென்னை உயர் நீதிமன்றம்

    மின் வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தடை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு இந்தியா
    மனநலம் பாதித்தவர்களுக்கான 55 மறுவாழ்வு மையங்கள்-நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தமிழ்நாடு
    கள்ளக்குறிச்சி பள்ளியில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் இயங்க அனுமதி இந்தியா
    கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - ஆட்சியருக்கு உத்தரவு இந்தியா

    மாவட்ட செய்திகள்

    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு
    சாதிய ஒடுக்குமுறையைத் ஒழிக்க ஒரு சமத்துவ பொங்கல்! இந்தியா
    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! கோவை
    பழுதடைந்த சாலையால் உயிரிழந்த பெண்: Zoho நிறுவனர் ட்வீட்! தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025