NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.18 கோடியில் 10 பஸ்கள் நன்கொடை
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.18 கோடியில் 10 பஸ்கள் நன்கொடை
    திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.18 கோடியில் 10 பஸ்கள் நன்கொடை

    திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.18 கோடியில் 10 பஸ்கள் நன்கொடை

    எழுதியவர் Nivetha P
    Mar 29, 2023
    07:01 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆந்திர மாநிலம், திருப்பதி மலையில் 100 சதவீதம் சுற்றுசூழல் பாதுகாப்பிற்கு திருப்பதி தேவஸ்தானம் முயற்சி செய்து வருகிறது.

    அதன் முயற்சியாக பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அதே போல் தங்கள் பங்காக திருப்பதியில் ஓடும் தேவஸ்தான கார்களில் பல கார்களை மின்சார கார்களாக மாற்றம் செய்துள்ளனர்.

    தற்போது இயங்கி வரும் இலவச பேருந்துகளையும் மின்சார பேருந்துகளாக மாற்ற தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    இதற்கிடையே ஹைதராபாத் ஒலக்ட்ரா என்னும் பெயரில் மின்சார பேருந்துகளை உற்பத்தி செய்யும் மெகா இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.18 கோடி மதிப்புள்ள 10 மின்சார பேருந்துகளை நன்கொடையாக வழங்க விருப்பம் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.

    தேவஸ்தான அறங்காவலர் பேட்டி

    திருப்பதி கோயில் முன்பு பேருந்துகளை நிற்க வைத்து சிறப்பு பூஜைகள்

    இந்நிலையில் தற்போது இந்த பேருந்துகளை நேற்று(மார்ச்.,28) திருப்பதி மலைக்கு வந்த நிலையில், மின்சார பேருந்துகளை இயக்க தேவையான பயிற்சிகள் தேவஸ்தான ஓட்டுநர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

    நன்கொடை கொடுத்த நிறுவனம் திருப்பதி கோயில் முன்பு பேருந்துகளை நிற்க வைத்து சிறப்பு பூஜைகளை செய்து பின்னர் தேவஸ்தான நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.

    இது குறித்து தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி பேசுகையில், திருமலையில் காற்றில் மாசுப்படுவதை தவிர்க்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    விரைவில் திருமலையில் ஓடும் வாடகை கார்கள் கூட எலக்ட்ரிக் கார்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    மேலும் காணிக்கையாக அளிக்கப்பட்டுள்ள 10 பேருந்துகளுமே திருமலையில் பக்தர்கள் இலவசமாக பயணம் செய்ய பயன்படுத்த தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருப்பதி
    ஆந்திரா

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    திருப்பதி

    திருப்பதி செல்வதற்கு கொரோனா சான்றிதழ் கட்டாயமா? கொரோனா
    70 லட்சம் மதிப்புள்ள வீட்டை ஏழுமலையானுக்கு கொடுத்த பக்தை! இந்தியா
    பக்தர்கள் அதிகம் செல்லும் கோவில் - ஆன்மீக பயணங்கள் குறித்த ஓயோ ஆய்வு இந்தியா
    திருப்பதி கோயில் 6 மாதங்கள் மூடப்படுவதாக இணையத்தில் பரவிய செய்தி - விளக்கம் அளித்துள்ள திருப்பதி தேவஸ்தானம் இந்தியா

    ஆந்திரா

    ஆந்திராவின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம் - முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு முதல் அமைச்சர்
    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் தெலுங்கானா
    தெலுங்கானா-புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தில் திடீர் தீ விபத்து தெலுங்கானா
    மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது தெலுங்கானா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025