வடக்கன்ஸ் பற்றிய விஜய் ஆண்டனியின் ட்வீட் வைரல்!
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் வடமாநிலத்தவரின் ஆதிக்கம் பற்றி சமீபகாலமாக சர்ச்சைகளும், எதிர்ப்பு குரல்களும் அதிகமாக எழுந்த வண்ணம் உள்ளது. அது குறித்த தனது கருத்தை, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் நடிகர்-இசையமைப்பாளர்-தயாரிப்பாளரான விஜய் அண்டனி. இது இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அவர் இட்ட பதிவின்படி, எந்த மாநிலத்தவராக இருந்தாலும், அவர்களும் நம்மை போலவே, ஒரு குடும்பத்தை காப்பாற்றவே உழைக்கிறார்கள் என பொருள்படும்படி இருந்தது. சமூக கருத்துகளை பற்றி விஜய் ஆண்டனி பதிவிடுவது இது முதன்முறையன்று. இதற்கு முன்னரும், பெண்கள் மீது காட்டப்படும் வன்முறைக்கு எதிராக தாம் உறுதிமொழி எடுத்துள்ளதாக அவர் பதிவிட்டிருந்தார். அதேபோல, ஆலந்தூர் ரயில் நிலையத்தில், இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்திலும், தனது கருத்தை பதிவிட்டிருந்தார்.