NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / நடிகர் சங்கம் சார்பில் ஜனவரி 19ல் விஜயகாந்துக்கு இரங்கல் கூட்டம்- பொருளாளர் கார்த்தி அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    நடிகர் சங்கம் சார்பில் ஜனவரி 19ல் விஜயகாந்துக்கு இரங்கல் கூட்டம்- பொருளாளர் கார்த்தி அறிவிப்பு

    நடிகர் சங்கம் சார்பில் ஜனவரி 19ல் விஜயகாந்துக்கு இரங்கல் கூட்டம்- பொருளாளர் கார்த்தி அறிவிப்பு

    எழுதியவர் Srinath r
    Jan 04, 2024
    12:08 pm

    செய்தி முன்னோட்டம்

    தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு ஜனவரி 19ஆம் தேதி இரங்கல் கூட்டம் நடைபெறும் என அச்சங்கத்தின் பொருளாளர் நடிகர் கார்த்தி அறிவித்துள்ளார்.

    கடந்த சில வருடங்களாக உடல் நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்த விஜயகாந்த், கடந்தாண்டு டிசம்பர் 28ஆம் தேதி, நிமோனியா தொற்றால் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

    இவரது உடல் அரசு மரியாதையுடன், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    இந்நிலையில், இன்று நடிகர் கார்த்தி, அவரது நினைவிடத்தில் தனது தந்தை சிவகுமார் உடன் வந்து சூடமேற்றி, மலர் வளையம் வைத்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    2nd card

    "விஜயகாந்துடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை"

    அஞ்சலி செலுத்திய பின் பத்திரிகையாளர்களை சந்தித்த கார்த்தி, விஜயகாந்த் உடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    "விஜயகாந்த் உடன் எனக்கு நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு நான் அவரை சென்று சந்தித்தேன்.

    நடிகர் சங்கம் சவால்களை சந்திக்கும் போதெல்லாம் அவரை நினைத்துக் கொள்வோம். தலைவன் என்றால் எப்படி முன்னின்று வேலைகளை செய்ய வேண்டும் என்று அவரை பார்த்து கற்றுக்கொண்டோம்" என தெரிவித்தார்.

    வரும் 19ஆம் தேதி நடிகர் சங்கம் சார்பில் காமராஜர் அரங்கில் அவருக்காக இரங்கல் கூட்டம் நடைபெற உள்ளது என, நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி அறிவித்தார்.

    3rd card

    விஜயகாந்தின் குடும்பத்திற்கு கார்த்தி இரங்கல்

    அந்த இரங்கல் கூட்டத்தில், விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் செய்ய வேண்டியவை மற்றும் அரசிடம் அவருக்காக முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் அனைத்தும் வெளியிடப்படும் எனவும் கார்த்தி தெரிவித்தார்.

    விஜயகாந்தின் அன்பு தமிழ்நாடு முழுவதும் எப்போதும் பரவ வேண்டும் என தெரிவித்த கார்த்தி, அவரின் குடும்பத்திற்காகவும், அவரின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்காக ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

    விஜயகாந்த் உயிரிழந்த போது நடிகர் கார்த்தி வெளிநாட்டில் இருந்ததால், இறுதிச் சடங்கில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கார்த்தி
    விஜயகாந்த்
    சென்னை
    நடிகர் சங்கம்

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    கார்த்தி

    பொங்கல் விடுமுறையொட்டி சின்னத்திரைக்கு படையெடுக்கும் பொன்னியின் செல்வன் தமிழ் திரைப்படம்
    கைதி 2: விஜய்யின் லியோ பட ரிலீசிற்கு பிறகு படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்ப்பு லோகேஷ் கனகராஜ்
    டிஜிட்டல் சோழர்கள்: குந்தவையுடன் ட்விட்டரில் கடலை போட ட்ரை பண்ணும் வந்தியத்தேவன்! வைரலான ட்வீட்
    தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டிற்கு பாராட்டு தெரிவித்த நடிகர் கார்த்தி பட்ஜெட் 2023

    விஜயகாந்த்

    "என் உயிரை நான் சந்தித்தபோது": கேப்டன் விஜயகாந்தை சந்தித்த இயக்குனர் S.A. சந்திரசேகர் கோலிவுட்
    தமிழகத்தில் புதிய நிலக்கரி சுரங்க விவகாரம் - எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த் அறிக்கை மத்திய அரசு
    வெளிநாட்டில் மாற்ற உடையின்றி தவித்த ரஜினிகாந்த்! என்ன நடந்தது? ரஜினிகாந்த்
    எந்த கூட்டணியுடனும் தற்போது செயல்படவில்லை: தேமுதிக அறிவிப்பு தேமுதிக

    சென்னை

    வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு - அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை உயர்கல்வித்துறை
    சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கசிந்த எண்ணெய் படலம் அகற்றும் பணி நிறைவு-சுப்ரியா சாகு  கடற்படை
    தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 27ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு  தமிழ்நாடு
    நடிகை கௌதமி கொடுத்த நில மோசடி வழக்கில் 6 பேர் கைது - மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிரடி  கைது

    நடிகர் சங்கம்

    தனுஷ், SJ சூர்யா, அமலா பால் உள்ளிட்டோருக்கு ரெட் கார்டு: விளக்கம் அளித்த தென்னிந்திய நடிகர் சங்கம்  தனுஷ்
    நடிகர் சங்கத்தில் மூத்த உறுப்பினர்களுக்கு ஆதரவான நடவடிக்கை மேற்கொண்ட விஷால் விஷால்
    நடிகர் சிம்புவிற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு  சிலம்பரசன்
    திரையுலகம் சார்பில் கலைஞர்100- ரஜினிக்கு நேரில் அழைப்பு விடுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் கலைஞர் கருணாநிதி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025