வருங்கால முதல்வரே! ரசிகரின் சத்தமும் சிவகார்த்திகேயனின் ரியாக்ஷனும்: வைரல் வீடியோ
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வந்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் சமீபத்தில் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சி ஒன்றில், கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் "வருங்கால முதல்வரே" என உரத்த குரலில் கத்தினார். அதைக் கேட்டதும் சிவகார்த்திகேயன் மேடையில் வெட்கப்பட்டு சிரித்துக்கொண்டே, உதட்டின் மேல் விரலை வைத்து "உஷ்... அமைதியா இருங்க" என்று சைகை செய்தார். இந்த சுவாரசியமான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சினிமாவில் இருந்து அரசியல்
திரைத்துறையும் அரசியலும்: விஜய் முதல் தனுஷ் வரை
தமிழ் சினிமாவில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிய விஷயமல்ல. உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் தனது திரைப்பயணத்தின் உச்சத்தில் அரசியல் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் களமிறங்கியுள்ளார்.
அவரைத் தொடர்ந்து தற்போது தனுஷ், சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதன் போன்ற அடுத்த தலைமுறை நடிகர்களையும் ரசிகர்கள் அரசியலோடு ஒப்பிட்டுப் பேசத் தொடங்கியுள்ளனர்.
தனுஷ் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்தித்து வருவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இந்த அடுத்த முதல்வர் பேச்சு மேலும் சூடுபிடித்துள்ளது.
கோரிக்கை
புதிய கட்சி தொடங்க ரசிகர்களின் கோரிக்கை
சிவகார்த்திகேயனின் இந்த புன்னகையையும், வெட்கத்தையும் பார்த்த அவரது ரசிகர்கள், "அண்ணனுக்குள் அரசியல் ஆசை இருக்கிறது போல" என இணையத்தில் வைரல் செய்து வருகின்றனர்.
திரையில் சாதித்தது போல், சிவகார்த்திகேயன் தனியாக புதிய அரசியல் கட்சி தொடங்கி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என ஒருசாரார் கூறி வருகின்றனர்.
டிவி தொகுப்பாளராகத் தொடங்கி, இன்று தயாரிப்பாளராகவும் வெற்றி நாயகனாகவும் வலம் வரும் சிவகார்த்திகேயனுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் நன்மதிப்பே இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Embed
"வருங்கால முதல்வர்.." ரசிகர் சொன்ன வார்த்தை.. சிவகார்த்திகேயன் கொடுத்த ரியாக்ஷன்..!#Chennai | #Sivakarthikeyan | #SKFans | #PolimerNews pic.twitter.com/HayY1khALl
— Polimer News (@polimernews) August 21, 2026
சிவகார்த்திகேயன்
நிஜத்தில் சிவகார்த்திகேயனின் அடுத்தகட்டத் திட்டங்கள்
ரசிகர் கத்தியதற்கு சிவகார்த்திகேயன் சைகை மூலம் பதிலளித்தது ஒரு ஜாலியான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.
தற்போது அவர் தனது கவனம் முழுவதையும் அடுத்தடுத்த பிரம்மாண்ட திரைப்படங்களில் மட்டுமே செலுத்தி வருகிறார்.
இருப்பினும், விஜய்யைத் தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் நடிகர்களை சுற்றி நிகழும் இந்த அரசியல் பேச்சுக்கள், தமிழ் திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் தொடர்ந்து சுவாரசியமான விவாதப் பொருளாகவே நீடித்து வருகிறது.