MeToo இயக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சாய் பல்லவி: 'வாய்மொழியாக திட்டுவதும் கூட ஒரு வகையான துன்புறுத்தல் தான்'
நடிகை சாய் பல்லவி, சமீபத்தில், பெண்கள் தினத்தை முன்னிட்டு, தெலுங்கு டாக்-ஷோ ஒன்றில் பங்குபெற்றார். 'நிஜம் வித் ஸ்மிதா' என்ற பெயரிடப்பட்ட அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சாய்பல்லவியிடம், 'மீ-டூ' (MeToo) இயக்கம் குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சாய் பல்லவி, "நீங்கள் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட வேண்டியதில்லை. ஒருவரை வாய்மொழியாகத் திட்டுவதும், அவர்களை அசௌகரியப்படுத்துவதும் கூட ஒரு வகையான துஷ்பிரயோகம் தான்" என பதில் தெரிவித்திருந்தார். சாய் பல்லவியின் இந்த கருத்து, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. நடிகை சாய் பல்லவி, கடைசியாக 'கார்கி' என்ற படத்தில் நடித்திருந்தார். அதில் குழந்தைகள் மீது நடைபெறும் பாலியல் சீண்டல்கள், துன்புறுத்தல்கள் மற்றும் கற்பழிப்பு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு திரைக்கதை புனையப்பட்டிருந்தது.