Page Loader
ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன்; டிராகன் 100 நாள் விழாவில் உணர்ச்சிகரமாக பேசிய பிரதீப் ரங்கநாதன்

ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன்; டிராகன் 100 நாள் விழாவில் உணர்ச்சிகரமாக பேசிய பிரதீப் ரங்கநாதன்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 29, 2025
10:09 am

செய்தி முன்னோட்டம்

லவ் டுடே என்ற பிளாக்பஸ்டர் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நடிகர்-இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், தனது சமீபத்திய படமான டிராகன் திரையரங்குகளில் 100 நாட்களை நிறைவு செய்ததன் மூலம் மற்றொரு மைல்கல்லைக் கொண்டாடினார். ஓ மை கடவுளே புகழ் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் இந்த வருடம் பிப்ரவரியில் வெளியிடப்பட்ட டிராகன் பார்வையாளர்களிடமிருந்து பெரும் ஆதரவைப் பெற்றது. மேலும், இது பிரதீப்பிற்கு மற்றொரு பெரிய வெற்றியாக அமைந்தது. 100 நாள் கொண்டாட்ட நிகழ்வில், பிரதீப் ஒரு உணர்ச்சிபூர்வமான உரையை நிகழ்த்தினார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது. அதில், ஓ மை கடவுளே படத்தில் அஸ்வத் முதன்முதலில் தனக்கு ஒரு சிறிய வேடத்தை வழங்கியபோது பயணம் எவ்வாறு தொடங்கியது என்பதை அவர் நினைவு கூர்ந்தார்.

நன்றி

ரசிகர்களுக்கு நன்றி

அஸ்வத் தனக்கு சிறு வாய்ப்பை கொடுத்த நிலையில், அவரிடம் தான் ஒரு ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று தைரியமாக கூறியதாக பிரதீப் ரங்கநாதன் தெரிவித்தார். இந்நிலையில், லவ் டுடே படத்தின் வெற்றிக்குப் பிறகு, பிரதீப் மீண்டும் அஸ்வத்தை அணுகியபோது, அவர் 100 நாட்கள் ஓடும் ஒரு படத்தை இயக்குவதாக உறுதியளித்தார் என்றும் அந்த வாக்குறுதியை டிராகன் மூலம் நிறைவேற்றினார் என்றும் கூறினார். இதற்காக, பிரதீப் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, தொடர்ந்து ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன் என்றார். டிராகன் வெற்றியைத் தொடர்ந்து, பிரதீப் டியூட் மற்றும் LIK ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.