LOADING...
தணிக்கை தடைகளை தகர்த்த 'பராசக்தி'! நாளை திட்டமிட்டபடி ரிலீஸ்
'பராசக்தி'! நாளை திட்டமிட்டபடி ரிலீஸ்

தணிக்கை தடைகளை தகர்த்த 'பராசக்தி'! நாளை திட்டமிட்டபடி ரிலீஸ்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 09, 2026
01:40 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள 'பராசக்தி' திரைப்படத்திற்கு, ஒருவழியாக மத்திய தணிக்கை வாரியம் (CBFC) சான்றிதழ் வழங்கியுள்ளது. பல்வேறு இழுபறிகளுக்கு பிறகு, இப்படத்திற்கு 'U/A' சான்றிதழ் கிடைத்துள்ளதால், ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை (ஜனவரி 10) திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. 1960-களில் மெட்ராஸில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தணிக்கை வாரியம் பரிந்துரைத்த 15-க்கும் மேற்பட்ட வெட்டுக்களை இயக்குநர் சுதா கொங்கரா ஏற்க மறுத்துவிட்டார். அந்த மாற்றங்கள் படத்தின் வரலாற்று உண்மைகளையும் கருப்பொருளையும் சிதைத்துவிடும் என்று அவர் வாதிட்டார். இதனைத் தொடர்ந்து, மும்பையில் உள்ள திருத்தக் குழுவிடம் (Revising Committee) மேல்முறையீடு செய்யப்பட்டது.

தணிக்கை

U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது

தற்போது 2 மணி நேரம் 43 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படத்திற்கு 16+ வயதுடையவர்கள் பார்க்கும் வகையில் அனுமதி கிடைத்துள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் 100-வது படமான இதில் சிவகார்த்திகேயன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான போராட்டத்தைச் சித்தரிக்கும் இப்படம், திமுகவின் அடிப்படைக் கொள்கைகளுடன் தொடர்புடைய கதையம்சத்தை கொண்டுள்ளதால் அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது. இதேபோல், நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படமும் தணிக்கைச் சிக்கலில் சிக்கி, தற்போது நீதிமன்றத்தில் மேல்முறையீட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பல தடைகளை தாண்டி 'பராசக்தி' நாளை வெளியாகவுள்ள அறிவிப்பு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சினிமா ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement