கணவர் அசோக் செல்வனுக்கு ஸ்வீட்டாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த கீர்த்தி பாண்டியன்
நடிகர் அசோக் செல்வன் இன்று தனது 35வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அசோக் செல்வனின் பிறந்தநாளிற்காக, நடிகை கீர்த்தி பாண்டியன் தனது வாழ்த்துக்களை, இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். வானவில் பின்னணியில் ஜோடியாக இவர்கள் நிற்கும் இந்த புகைப்படத்திற்கு, "பிறந்தநாள் வாழ்த்துக்கள் கணவரே..எனக்கு நிகழ்ந்த மிகப்பெரிய விஷயம் நீதான்.உன் அன்பும் சந்தோஷமும், இயற்கையை கூட சிறந்ததாகவே வெளிக்கொண்டு வருகிறது. உன் பரந்த உள்ளத்திற்காகவே நீ அனைத்து நல்ல விஷயங்களையும் மிகுதியாகவே பெறுவாய். என்னை மயக்குபவனே, ஐ லவ் யு" என பதிவிட்டுள்ளார். நடிகை கீர்த்தி பாண்டியனும், நடிகர் அசோக் செல்வனும் பல ஆண்டுகள் காதலித்து, சென்று மாதம் திருமணம் செய்துகொண்டனர்.