
கொட்டுக்காளி படத்தின் முதல் விமர்சனத்தை தந்த உலகநாயகன்: பெருமிதத்துடன் பகிர்ந்த சிவகார்த்திகேயன்
செய்தி முன்னோட்டம்
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள 'கொட்டுக்காளி' திரைப்படம் உலக அரங்கில் ஏற்கனவே பல அங்கீகாரங்களையும், விருதுகளையும் படைத்துள்ளது.
இந்த வாரம் இப்படம் இந்தியாவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தினை உலகநாயகன் கமல்ஹாசனுக்கு பிரத்யேகமாக திரையிட்டுள்ளார் படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சிவகார்த்திகேயன்.
படத்தை பார்த்ததும் தனது முதல் விமர்சனத்தை தற்போது கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.
அதில்,"இது கொட்டுக்காளி படத்தின் விமர்சனம் அல்ல. இனி இது போன்ற நல்ல சினிமாக்களும் தமிழில் அடிக்கடி வரும் எனக் கூறும் கட்டியம். ஒரு சிலருக்கு எச்சரிக்கை. ரசனைக் குறைபாடுள்ளவர்கள் தம்மை விரைவில் மேம்படுத்திக் கொள்ளாவிடில் நல்ல நவீன சினிமாவின் நீரோட்டத்தில் கலக்க முடியாது. கரையிலேயே நின்றபடி தண்ணீரை அசுத்தப்படுத்தாமல் அவர்கள் தங்கள் தாகங்களைத் தீர்த்துக்கொள்ள வேண்டியதுதான்" என குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
A moment to cherish for our team #Kottukkaali. Appreciation from the pioneer of Indian cinema, our Ulaganayagan @ikamalhaasan Sir.
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) August 21, 2024
This letter is a treasure.
Thank you so much Sir. 🙏🙏❤️❤️ pic.twitter.com/uoCNkTYA1C