
கன்னட சர்ச்சைக்கு அடுத்து இந்தி திணிப்பு குறித்து பேசிய நடிகர் கமல்ஹாசன்; ஆங்கிலத்தின் அவசியத்தையும் வலியுறுத்தினார்
செய்தி முன்னோட்டம்
நடிகர் கமல்ஹாசன் தனது சமீபத்திய திரைப்படமான தக் லைஃப் பட ஆடியோ வெளியீட்டில் கன்னட மொழி குறித்து பேசி சர்ச்சையாகிய நிலையில், தற்போது இந்தி மொழி குறித்து பேசியுள்ளார்.
முன்னதாக, தக் லைஃப் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்தே கன்னட மொழி உருவானதாக கமல்ஹாசன் பேச, இதற்கு கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி முதல் அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, கர்நாடகாவில் படம் திட்டமிட்டப்படி ஜூன் 5 அன்று வெளியாகவில்லை.
நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க கோரிக்கை வந்த நிலையில் அவர் மறுத்ததால், ஜூன் 5 ஆம் தேதி கர்நாடக திரைப்பட வர்த்தக சபை (KFCC) அந்த மாநிலத்தில் படத்தின் வெளியீட்டைத் தடுத்தது.
இந்தி திணிப்பு
இந்தி திணிப்பு சர்ச்சையை கையிலெடுத்த கமல்ஹாசன்
இந்த மொழி சர்ச்சைக்கு மத்தியில், தற்போது இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு குறித்து கமல்ஹாசன் பேசியுள்ளார்.
1981 ஆம் ஆண்டு வெளியான அவரது இந்தி திரைப்படமான மைன் ஏக் துஜே கே லியேவை மேற்கோள் காட்டி, "இந்தியை திணிப்பு இல்லாமல் தேவைப்பட்டால் கற்றுக்கொள்வோம், ஏனெனில் அது ஒரு கல்வி வடிவம்.
ஆனால் இந்த செயல்பாட்டில் பிராந்திய மொழிகளைத் தடுக்க வேண்டாம்" என்று கூறினார்.
கட்டாய இந்தி திணிப்பை எதிர்க்கும் பஞ்சாப், கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களுடன் அவர் ஒற்றுமையை உறுதிப்படுத்தினார்.
ஆங்கிலம்
ஆங்கிலத்திற்கு ஆதரவாக பேச்சு
இந்தியாவில் ஆங்கிலத்தின் 350 ஆண்டுகால வரலாற்றைக் குறிப்பிட்டு, அதன் நடைமுறைத்தன்மையை கமல்ஹாசன் மேலும் வலியுறுத்தினார்.
மற்ற மொழிகளை விட இந்திக்கு திடீரென முன்னுரிமை அளிப்பது, இந்தி அல்லாத பிற மொழி பேசுபவர்களை, குறிப்பாக தமிழ்நாட்டில் அந்நியப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்தார்.
"திடீர் மாற்றங்கள் மக்களை தங்கள் சொந்த நிலத்தில் கல்வியறிவற்றவர்களாக மாற்றக்கூடும்" என்று அவர் எச்சரித்தார்.