LOADING...
ரஜினியின் படத்திலிருந்து சுந்தர்.சி விலகியதன் உண்மையான காரணம் இதுதான்; நடிகர் கமல்ஹாசன் விளக்கம்
ரஜினியின் படத்திலிருந்து சுந்தர்.சி விலகியது குறித்து கமல்ஹாசன் விளக்கம்

ரஜினியின் படத்திலிருந்து சுந்தர்.சி விலகியதன் உண்மையான காரணம் இதுதான்; நடிகர் கமல்ஹாசன் விளக்கம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 15, 2025
02:55 pm

செய்தி முன்னோட்டம்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன், தாம் தயாரிக்கும் ரஜினிகாந்தின் திரைப்படத்தில் இருந்து இயக்குனர் சுந்தர்.சி விலகியது குறித்து விளக்கமளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சுந்தர்.சி விலகியதற்கான காரணத்தை அவர் ஏற்கனவே தெரிவித்துவிட்டதாகக் குறிப்பிட்டார். கமல்ஹாசன் கூறுகையில், "எனது கருத்து ரஜினிகாந்திற்கு பிடித்த கதையை எடுப்பதுதான் எனக்கு ஆரோக்கியமானது. அதைத்தான் தற்போது செய்து வருகிறோம். ரஜினிகாந்துக்குப் பிடிக்கும் வரை கதை கேட்டுக் கொண்டே இருப்போம்," என்று கூறினார். இதன் மூலம், ரஜினிகாந்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற கதை அமையாததே சுந்தர்.சி விலகியதற்குக் காரணமாக இருக்கலாம் என்று மறைமுகமாக உணர்த்தியுள்ளார்.

புதிய இயக்குனர்

புதிய இயக்குனருக்கும் வாய்ப்பு கிடைக்கலாம்

இந்தப் புதிய வாய்ப்பில் புதிய இயக்குனர்களுக்கும் இடம் உண்டு என்று குறிப்பிட்ட கமல், கதை நன்றாக இருக்க வேண்டும் என்பதே பிரதானம் என்றார். மேலும், சுந்தர்.சி விலகல் குறித்துப் பேசிய பின், "நானும் ரஜினிகாந்தும் இணைந்து நடிப்பதற்கு இன்னொரு கதையைத் தேடிக் கொண்டிருக்கிறோம். தற்போது என் தயாரிப்பில் அவர் மட்டும் நடிக்கிறார். எதிர்பாராததை எதிர்பாருங்கள்." என்று கூறிவிட்டுப் புறப்பட்டுச் சென்றார். இதன் மூலம், ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமான எதிர்பார்ப்புகள் இருக்கலாம் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முன்னதாகப் பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய கமல்ஹாசன், "அங்கு வெற்றியைப் பெற்றவர்களைப் பற்றி நாம் பார்ப்பதைக் காட்டிலும், அந்த வெற்றி நேர்மையாக வந்ததா என்றுதான் ஆராய வேண்டும்." என்று தெரிவித்தார்.