NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / அகஸ்தியா தியேட்டரை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சேர்ந்து வாங்கியதாக கூறப்பட்டது உண்மையா? 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அகஸ்தியா தியேட்டரை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சேர்ந்து வாங்கியதாக கூறப்பட்டது உண்மையா? 
    நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சேர்ந்து வாங்கியதாக கூறப்பட்டது உண்மையா?

    அகஸ்தியா தியேட்டரை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சேர்ந்து வாங்கியதாக கூறப்பட்டது உண்மையா? 

    எழுதியவர் Arul Jothe
    May 24, 2023
    01:49 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக தண்டையார்பேட்டையில் இருக்கும் அகஸ்தியா திரையரங்கம் 1967-ல் திறக்கப்பட்டது.

    இந்தத் திரையரங்கில் எம்ஜிஆர் - சிவாஜி கணேசன் திரைப்படங்கள் முதல் எண்ணற்ற படங்கள் வெளியாகியுள்ளன.

    கொரோனா காலகட்டத்தில் கடும் நெருக்கடியை சந்தித்த திரையரங்கம் அதிலிருந்து மீளமுடியாமல் நிர்வாகம் திரையரங்கை மூடியது.

    இந்த நிலையில், அகஸ்தியா திரையரங்கை நடிகை நயன்தாராவும், அவரது கணவர் விக்னேஷ் சிவனும் வாங்கி இருப்பதாகவும் அதில் மல்டிபிளக்ஸ் கட்ட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

    இதுபோன்ற தகவல்கள் வெளியான நிலையில் திரையரங்க நிர்வாகம் இது குறித்து விளக்கமளித்துள்ளது.

    Nayanthara theatre

    அகஸ்தியா தியேட்டர் நிர்வாகத்தின் விளக்கம்

    "அகஸ்தியா தியேட்டர் தனிநபர் சொத்து கிடையாது. அகஸ்தியா அறக்கட்டளையின் கீழ்தான் இயங்கி வந்தது. அறக்கட்டளைக்கு சொந்தமான இடம் என்பதால் இதனை விற்கமுடியாது".

    "ஏற்கனவே, மெட்ரோ பணிகளுக்காக கொஞ்சம் இடத்தை கொடுத்துவிட்டோம். மீதமுள்ள இடத்தில் சங்கரா நேத்ராலயாவுடன் இணைந்து மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை கட்டவிருக்கிறோம்".

    "உண்மையில் இதற்கான, ஒப்பந்தம் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே போடப்பட்டுவிட்டது. அதனால், நயன்தாரா இந்த இடத்தை வாங்கிவிட்டார் என்று பரப்பப்படும் தகவல்களில் துளியும் உண்மை இல்லை".

    "இதற்கான, பேச்சுவார்த்தைக்கூட நடக்கவில்லை. முழுக்க முழுக்க பொய்யான தகவல் இது. பொதுமக்கள் நம்பவேண்டாம்." என்று திரையரங்க நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திரையரங்குகள்
    சென்னை

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    திரையரங்குகள்

    7000 கோடி வசூல் செய்த அவதார்: தி வே ஆஃப் வாட்டர் திரைப்பட அறிவிப்பு
    பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி வெளியாகும் இந்த வாரப் படங்கள் த்ரிஷா
    தியேட்டரிலிருந்து நீக்கம்: ஓடிடி-யில் ரிலீஸ் ஆகுமென இயக்குனர் அறிவிப்பு வைரல் செய்தி
    2022ல் வெளியான மலையாளத் திரைப்படங்களில் 90 சதவீத படங்கள் தோல்வி தென் இந்தியா

    சென்னை

     ஃபர்ஹானா படத்தின் சர்ச்சை குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்  தமிழ் திரைப்படங்கள்
    தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை என்ஐஏ
    சென்னையில் புதிய ஏசி தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் நிறுவனம்.. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது! ஜப்பான்
    சென்னையில் போதை பொருள் விற்பனை செய்த 2 பேர் கைது  காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025