கார்த்தியிலிருந்து வந்தியத்தேவனாக உருமாறியது எப்படி? மேக்கிங் வீடியோ வெளியிட்ட படக்குழு
மணிரத்னத்தின் பிரமாண்ட கனவுப்படமான 'பொன்னியின் செல்வன்', இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டது. முதல் பாகம், சென்ற ஆண்டு, செப்டம்பர் 30 வெளியானதை அடுத்து, இரண்டாம் பாகம், அடுத்த மாதம், ஏப்ரல்-28 அன்று வெளியாகவுள்ளது. படத்தில் நடித்தவர்கள், அனைவருமே கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருந்தனர் என பாராட்டப்பட்டது. அதிலும், வந்தியத்தேவனின் கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக பொருந்தி இருந்தார் கார்த்தி. அந்த துடிப்பும், காதலும், வீரமும் என நடிப்பில் அனைவரின் பாராட்டையும் பெற்றிருந்தார். அந்த பாத்திரத்தில், தற்போது, கார்த்தியை விட்டால் வேறு எவரையும் யோசிக்க முடியாத அளவிற்கு பொருந்தி இருந்தார். படம் வெளி வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில்,வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில், கார்த்தி எப்படி உருமாறினார் என்பதை விளக்கும் ஒரு வீடியோவை, தயாரிப்பாளர்கள் தரப்பு இன்று வெளியிட்டுள்ளது.