NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / "பள்ளி கல்லூரிகளில் சாதி சான்றிதழ் கேட்பது நிறுத்தப்பட வேண்டும் ": இயக்குனர் வெற்றிமாறன் கருத்து
    அடுத்த செய்திக் கட்டுரை
    "பள்ளி கல்லூரிகளில் சாதி சான்றிதழ் கேட்பது நிறுத்தப்பட வேண்டும் ": இயக்குனர் வெற்றிமாறன் கருத்து
    சர்ச்சையை கிளப்பிய இயக்குனர் வெற்றிமாறனின் பேச்சு

    "பள்ளி கல்லூரிகளில் சாதி சான்றிதழ் கேட்பது நிறுத்தப்பட வேண்டும் ": இயக்குனர் வெற்றிமாறன் கருத்து

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 04, 2023
    04:25 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அண்மையில் நடைபெற்ற தமிழ் கனவு, தமிழ் மரபும் மற்றும் பண்பாட்டு பரப்புரை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறனின் கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    அதில் பேசிய வெற்றிமாறன், தமிழ் சினிமாவில் வெளிப்படுத்தப்படும் கருத்துகள், சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டாலும், விவாத பொருளாக வாய்ப்புள்ளதாக கூறினார்.

    இறுதியில், பார்வையாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்கும் போது, "நீங்கள் எடுக்கும் படத்திலும், நிஜத்திலும், அனைத்து சாதிகளும் சமம் என்று சொல்கிறார்கள். ஆனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கண்டிப்பாக சாதியை குறிப்பிட சொல்கிறார்கள். இது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?" என கேட்கப்பட்டது.

    ட்விட்டர் அஞ்சல்

    இயக்குனர் வெற்றிமாறன் கருத்து

    #NewsUpdate | "எனக்கு சாதி தேவையில்லை என எனும்போது, அதை மறுப்பதற்கான வாய்ப்பு வழங்க வேண்டும்”- இயக்குநர் வெற்றிமாறன் பேச்சு#SunNews | #Vetrimaaran | #TamilCinema | #Caste pic.twitter.com/kPH0tl100S

    — Sun News (@sunnewstamil) February 4, 2023

    வெற்றிமாறன்

    "உரிமையை பெற சாதிச்சான்றிதழ் தேவைப்படுகிறது"

    அதற்கு பதில் கூறிய வெற்றிமாறன், தன்னுடைய பிள்ளைகளுக்கு 'NO caste ' சான்றிதழ் வாங்க முயன்றதாகவும், ஆனால், அப்படி தர முடியாது என்று கூறப்பட்டதாகவும், நீதிமன்றத்திலும், 'அப்படி தர முடியாது சாதியை போட்டே ஆக வேண்டும்' என்று கூறப்பட்டதாகவும், தெரிவித்தார்.

    "முடிந்தவரை சாதி சான்றிதழை தராமல் இருக்க வேண்டும் என்பதை முயற்சிக்கிறேன். பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் சாதிச்சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் யாருக்கு தேவை இல்லையோ, அவர்களிடம் அதனை கேட்க வேண்டாம். எனக்கு தேவை இல்லை என நான் நினைக்கிறேன்", எனக்கூறினார்.

    "ஆனால் அவர்களுக்கான உரிமையை வாங்க வேண்டிய இடத்தில், சாதிச்சான்றிதழை கொடுத்துதான் ஆகவேண்டும்", என அவர் மேலும் கூறினார்.

    அவரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோலிவுட்
    வெற்றிமாறன்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    கோலிவுட்

    பிரபல குணசித்திர நடிகர் E .ராமதாஸ் மாரடைப்பால் காலமானார் தமிழ் திரைப்படம்
    தலைவாசல் விஜய் வீட்டில் விரைவில் டும் டும் டும்: கிரிக்கெட் வீரரை கரம் பிடிக்க போகும் விஜயின் மகள் வைரல் செய்தி
    பிப்ரவரி 1 முதல், ஹோட்டல் பிசினஸில் களமிறங்கும் பிரியா பவானிஷங்கர்; விபரங்கள் உள்ளே பொழுதுபோக்கு
    நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்யப் போகிறாரா? தாயார் மேனகா சுரேஷ் தகவல் பொழுதுபோக்கு

    வெற்றிமாறன்

    மீண்டும் தாமதமாகும் சூர்யா திரைப்படம்- வெற்றிமாறனின் 'வாடிவாசல்' திரைப்பட அறிவிப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025