LOADING...
படம் வர்றதுக்கு முன்னாடியே ரூ.50 கோடி பிசினஸ்; டிமான்டி காலனி 3 ஓடிடி உரிமையை தட்டிப்பறித்த முன்னணி நிறுவனம்
டிமான்டி காலனி 3 ரிலீசுக்கு முன்பே 50 கோடி ரூபாய் சாதனை ஒப்பந்தம்

படம் வர்றதுக்கு முன்னாடியே ரூ.50 கோடி பிசினஸ்; டிமான்டி காலனி 3 ஓடிடி உரிமையை தட்டிப்பறித்த முன்னணி நிறுவனம்

எழுதியவர் Sekar Chinnappan
Jan 11, 2026
05:30 pm

செய்தி முன்னோட்டம்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் டிமான்டி காலனி 3 திரைப்படம், திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே ஒரு பிரம்மாண்டமான சாதனையைப் படைத்துள்ளது. இந்தப் படத்தின் டிஜிட்டல் ஓடிடி, சேட்டிலைட் மற்றும் ஆடியோ உரிமைகள் அனைத்தும் சேர்த்து சுமார் 50 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு ஹாரர் த்ரில்லர் படத்திற்கு இவ்வளவு பெரிய தொகைக்கு ஒப்பந்தம் கையெழுத்தாவது தமிழ் சினிமாவில் இதுவே முதல் முறை எனக் கருதப்படுகிறது.

ஓடிடி

ஓடிடி மற்றும் சேட்டிலைட் பார்ட்னர்கள்

இந்தப் படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை பிரபல ஓடிடி தளமான ஜீ5 நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதேபோல், படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் தொலைக்காட்சியும், ஆடியோ உரிமையை டி சீரிஸ் சவுத் நிறுவனமும் பெற்றுள்ளன. கடந்த இரண்டு பாகங்களின் மாபெரும் வெற்றியே, மூன்றாவது பாகத்திற்கு இத்தகைய பெரிய வரவேற்பு கிடைக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

கதை

கதைக்களம் மற்றும் படப்பிடிப்பு

2015 இல் வெளியான முதல் பாகம் ஒரு கிளாசிக் ஹாரர் படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து வந்த இரண்டாம் பாகமும் பாக்ஸ் ஆபீஸில் வசூலைக் குவித்தது. தற்போது மூன்றாவது பாகத்தில் அதே இருண்ட மற்றும் பயமுறுத்தும் சூழலை இயக்குனர் அஜய் ஞானமுத்து விரிவுபடுத்தியுள்ளார். இந்தப் படத்தின் முதற்கட்ட பணிகள் முடிந்து, கடந்த ஜூலை மாதம் பூமி பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. ரசிகர்களை உறைய வைக்கும் வகையில் பல புதிய திருப்பங்கள் இதில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

ரிலீஸ்

ரிலீஸ் எப்போது?

திரையரங்கு உரிமைகளுடன் சேர்த்து இந்தப் படத்தின் மொத்த பிசினஸ் இன்னும் பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோடை விடுமுறையைக் குறிவைத்து, வரும் மே மாதம் இந்தப் படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களிடையே நிலவும் இந்தப் படத்தின் மீதான ஆர்வம், படத்தின் வெற்றியை இப்போதே உறுதி செய்வது போல் அமைந்துள்ளது.

Advertisement