நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோவை பரப்பிய நால்வரை கைது செய்த டெல்லி காவல்துறை
சமீபகாலமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொழில்நுட்ப உதவியுடன் மாற்றி போலி வீடியோக்கள் வைரலாகி வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் உருவான இந்த போலி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பொதுவாக நடிகைகளை குறிவைத்தே உருவாக்கப்படுகின்றன. குறிப்பாக நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ சில நாட்களுக்கு முன்னர் வைரலானது. அவரை ஆபாசமாக சித்தரித்து வெளியிடப்பட்ட டீப் ஃபேக் வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானது. பிரபலங்கள் பலரும் இந்த வீடியோவை வெளியிட்டவர்கள் மீது ஆக்ஷன் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதில் சம்மந்தப்பட்ட ராஷ்மிகா மந்தனாவும் ஒருவர். ராஷ்மிகாவை தொடர்ந்து கத்ரீனா கைஃப், ஆலியா பட் ஆகியோரின் டீப் ஃபேக் வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
வீடியோ பதிவிட்டவரை தேடி வந்த காவல்துறை
இந்த நிலையில், ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ தொடர்பாக டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த வீடியோவை வெளியிட்டது யார் என்பதை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நான்கு பேரை அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். அவர்களிடம் தற்போது விசாரணையும் நடத்தி வருகிறதாம் டெல்லி போலீஸ். விசாரணையில் அவர்கள் போலி ஐடியை பயன்படுத்தி இந்த டீப் ஃபேக் வீடியோ வெளியிட்டதும் தெரியவந்துள்ளது. அவர்கள் விபிஎன் பயன்படுத்தி இந்த வீடியோவை பதிவேற்றம் செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. டெல்லி காவல்துறை, மெட்டா நிறுவனத்திடம் தொடர்புகொண்டு சம்மந்தப்பட்ட வீடியோவை வெளியிட்டவர்களின் ஐடி விவரங்களை கேட்டு பெற்றுக்கொண்டு தான் இந்த நான்கு பேரையும் பிடித்துள்ளார்களாம்.