புஷ்பா 2: அல்லு அர்ஜுன் வாழ்க்கையில் ஒரு நாள்
நடிகர் அல்லு அர்ஜுன், தெலுங்கு திரையுலகின் 'சிறந்த நடிகர்'-க்கான முதல் தேசிய விருதை சென்ற வாரம் பெற்றார். 'புஷ்பா- தி ரைஸ்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. தற்போது, அந்த திரைப்படத்தின் அடுத்த பாகமான, 'புஷ்பா 2 - தி ரூல்' திரைப்படத்தின் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெறும் இந்த படத்தின் ஷூட்டிங்காக, அல்லு அர்ஜுன் எப்படி தயாராகிறார் என்ற காணொளி ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இன்ஸ்டாகிராமில் வெளியான இந்த வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது. இந்த படத்தை பற்றி அல்லு அர்ஜுன் கூறும்போது, "புஷ்பா கதாபாத்திரை பொறுத்தவரை எனக்கு மிகவும் பிடித்த விஷயம், அவன் எதற்காகவும் விட்டுத்தர மாட்டான் என்பது தான்" எனக்கூறியிருந்தார்.