NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / அமலாக்கத்துறையினர் விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா; என்ன நடந்தது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமலாக்கத்துறையினர் விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா; என்ன நடந்தது?
    அமலாக்கத்துறையினர் விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா

    அமலாக்கத்துறையினர் விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா; என்ன நடந்தது?

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 18, 2024
    09:21 am

    செய்தி முன்னோட்டம்

    பிரபல நடிகை தமன்னா பாட்டியா மீது அமலாக்கத்துறை 5 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது.

    இது ஐபிஎல் சூதாட்ட விளம்பர செயலியை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் வழக்கில், தமன்னா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் அவர் குவஹாத்தியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு நேற்று ஆஜராகினார்.

    தமன்னா, சட்டவிரோத ஐபிஎல் சூதாட்டத்துடன் தொடர்புடைய விளம்பரத்தில் நடித்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.

    இதற்கான விசாரணை உள்பட, அமலாக்கத் துறை அண்மையில் வியாழக்கிழமை நடிகைக்கு சம்மன் அனுப்பியது.

    ஆன்லைன் சூதாட்ட செயலில் நடித்ததற்காக தமன்னாவுக்கு இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது; இதற்கு முன்பு, அவர் மகாராஷ்டிராவில் உள்ள அமலாக்கத்துறையால் விசாரணைக்கு அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #JustNow | நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை!#TamannaahBhatia | #FairplayApp | #IPLMatches | #ED pic.twitter.com/FBtoeEK5az

    — JANANESAN News (@JananesaN_NewS) October 18, 2024

    விசாரணை

    5 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட விசாரணை

    அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு மதியம் 1:25 மணி அளவில் தமன்னா வந்தார். விசாரணைக்கு தந்தையுடன் ஆஜர் ஆனார் அவர். விசாரணை ஐந்து மணிநேரத்திற்கு மேலாக நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விசாரணை தொடர்பாக அமலாக்கத் துறை அல்லது தமன்னாவின் தரப்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கைகளும் இதுவரை வெளியாகவில்லை. ஆனாலும், இந்தியாவில் சூதாட்டச் சட்டங்களை மீறிய செயலிக்கான விளம்பர நடவடிக்கைகளில் அவர் பங்கேற்றதைக் குறிக்கும் குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெறுகிறது. இது போன்ற பிரபலங்களை பயன்படுத்தி, இந்த தளங்களை பிரபலப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமன்னா பாட்டியா
    அமலாக்கத்துறை

    சமீபத்திய

    விளையாட்டை விட பாதுகாப்புதான் முக்கியம்; ஐபிஎல் 2025 தொடர் ரத்து செய்யப்படலாம் என தகவல் ஐபிஎல் 2025
    சூழும் போர் மேகத்தால் அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்தா? யுஜிசி அறிக்கை யுஜிசி
    இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடாது என்று ஜே.டி. வான்ஸ் கூறுகிறார் இந்தியா
    அமெரிக்க-இங்கிலாந்திற்கு இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம்! அமெரிக்கா

    தமன்னா பாட்டியா

    தமன்னா பாட்டியா பிறந்தநாள்- கோலிவுட்டில் அவரின் சிறந்த 5 படங்கள் பாலிவுட்
    அரண்மனை 4 படத்தின் டிரெயிலர் வெளியானது பொழுதுபோக்கு
    'சட்டவிரோத' ஐபிஎல் ஸ்ட்ரீமிங் செயலி வழக்கில் தமன்னாவுக்கு சைபர் செல் சம்மன்  பொழுதுபோக்கு
    நடிகை தமன்னா மற்றும் பாடகர் பாட்ஷா மீது சட்டவிரோத ஐபிஎல் ஸ்ட்ரீமிங் வழக்கு ஐபிஎல்

    அமலாக்கத்துறை

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவர் பவன் முஞ்சலின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை ஹீரோ
    மூளை நரம்பில் ரத்த அடைப்புகள்; செந்தில் பாலாஜிக்கு தொடரும் சிகிச்சை செந்தில் பாலாஜி
    சென்னை நகை கடைகளில் 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை  சென்னை
    அந்நியச் செலாவணி விதிமீறல் தொடர்பாக பைஜூஸூக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை? வணிகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025