Page Loader
நடிகை சமந்தாவின் தந்தை காலமானார்; ரசிகர்கள், திரைத்துறையினர் இரங்கல்
நடிகை சமந்தாவின் தந்தை காலமானார்

நடிகை சமந்தாவின் தந்தை காலமானார்; ரசிகர்கள், திரைத்துறையினர் இரங்கல்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 29, 2024
05:18 pm

செய்தி முன்னோட்டம்

நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு இன்று காலமானார். இதனை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் மூலமாக தெரியப்படுத்தினார். அதில், "நாம் மீண்டும் சந்திக்கும் வரை, அப்பா" என்று எழுதினார், அதனுடன் உடைந்த இதய ஈமோஜியும் இருந்தது. சென்னை பல்லாவரத்தில் வசித்த ஜோசப் பிரபு மற்றும் நினெட் பிரபு ஆகியோருக்கு மகளாக பிறந்தவர் சமந்தா. ஜோசப் பிரபு, ஒரு தெலுங்கு ஆங்கிலோ-இந்தியர். சமந்தாவின் ஆரம்பகால வாழ்க்கை மற்றும் வளர்ப்பில் ஒரு ஒருங்கிணைந்த பங்கைக் கொண்டிருந்தார் ஜோசப். ஜோசப் பிரபுவின் மரணத்திற்கான காரணம் தெரியவில்லை.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

உறவு

தனக்கும்- தனது தந்தைக்குமான உறவு குறித்து சமீபத்தில் சமந்தா பகிர்ந்திருந்தார்

சமீபத்தில், சமந்தா HTக்கு அளித்த பேட்டியில் தனது தந்தையுடனான தனது "கடுமையான" உறவைப் பற்றி திறந்தார். Galatta India உடனான மற்றொரு நேர்காணலில், அவர் தனது தந்தையின் ஸ்ட்ரிக்ட் வளர்ப்பு முறையை பற்றியும் பேசினார். "என் வாழ்நாள் முழுவதும், அவருடைய அங்கீகாரத்திற்காக நான் போராட வேண்டியிருந்தது. என் தந்தை ஒருவிதமானவர்... பெரும்பாலான இந்தியப் பெற்றோர்கள் அப்படித்தான் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் உங்களைப் பாதுகாப்பதாக நினைக்கிறார்கள்... உண்மையில் அவர் என்னிடம், 'நீ அவ்வளவு புத்திசாலி இல்லை. .இது தான் இந்தியக் கல்வியின் தரம். ' என கூறுவார். சிறுவயது முதல் அப்படி கூறியதை கேட்டு, நான் புத்திசாலி இல்லை, திறமைசாலி இல்லை என்று நான் நீண்ட காலமாக நம்பினேன்" எனக்கூறினார்.