"சார்..!ரம்பா சார்..!": மீண்டும் வெள்ளித்திரையில் ரம்பா
'90களிலும், 2000த்தின் ஆரம்பகட்டத்திலும், ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. இவர், திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். அழகான மூன்று குழந்தைகளுடன் கனடாவில் செட்டில் ஆன ரம்பா, தற்போது மீண்டும் சினிமாவிற்கு வர திட்டமிட்டு வருகிறாராம். அவர் காலத்தில் ஹீரோயினாக நடித்த பலரும், தற்போது ரீஎன்ட்ரி ஆகி வரும் நிலையில், ரம்பாவிற்கும் அந்த ஆசை வந்து விட்டது போலும். இதற்காக தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் கதைகள் கேட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 20 வருடங்களில் 100 படங்களுக்கு மேல் நடித்த நடிகை ரம்பா, தற்போது தன்னுடைய 47 வது வயதில் செகண்ட் இன்னிங்சிற்கு தயாராகிறார் என்ற செய்தி அவரின் ரசிகர்களிடையே உற்சாகத்தை தந்துள்ளது.