NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / நடிகர் வடிவேலு என்னை ஆள் வைத்து அடித்தார் - காதல் சுகுமார் பேட்டி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நடிகர் வடிவேலு என்னை ஆள் வைத்து அடித்தார் - காதல் சுகுமார் பேட்டி 
    நடிகர் வடிவேலு என்னை ஆள் வைத்து அடித்தார் - காதல் சுகுமார் பேட்டி

    நடிகர் வடிவேலு என்னை ஆள் வைத்து அடித்தார் - காதல் சுகுமார் பேட்டி 

    எழுதியவர் Nivetha P
    Aug 01, 2023
    06:44 pm

    செய்தி முன்னோட்டம்

    1997ம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, பின்னர் 'காதல்' திரைப்படம் மூலம் காமெடியனாக பிரபலமானவர் காதல் சுகுமார்.

    அதனைத்தொடர்ந்து, கலகலப்பு, வசூல் ராஜா எம்பிபிஎஸ், தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட பல படங்களின் நடித்த இவர் 'திருட்டு விசிடி' என்னும் படத்தினை இயக்கியும் உள்ளாராம்.

    இதனிடையே இவர் அண்மையில் நடிகர் வடிவேலு தன்னை ஆள்வைத்து அடித்ததாக கூறி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளார்.

    இதன்படி அவர் கூறியதாவது, "கலகலப்பு படத்தில் வடிவேலு மாதிரி நடிக்க சொன்னார்கள். நான் முடியாது என்று மறுத்தேன். ஆனால் அதன்பின்னர், நானும் பொன்னம்பலமும் இணைந்து நடித்தோம்" என்று கூறியுள்ளார்.

    அப்போது, வடிவேலு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாராம்.

    அந்நிலையில் வடிவேலு பார்க்க வேண்டும் என்று கூறியதாக போண்டாமணியும், முத்துக்காளையும் சுகுமாரை அழைத்து சென்றுள்ளனர்.

    வடிவேலு 

    கெஞ்சி கதறி தப்பியதாக வேதனை 

    அங்கு சென்ற பின்னர் வடிவேலு 'என்னை போலவே நடித்திருக்கிறாய்' என்று பாராட்டியுள்ளார்.

    அதன் பின் போண்டாமணியும், முத்துக்காளையும் அறையினை விட்டு வெளியே சென்றுள்ளனர், அவர்கள் பின்னரே சுகுமாரும் வெளியேற முயற்சி செய்துள்ளார்.

    ஆனால் அவரை தடுத்து நிறுத்திய வடிவேலு, 'என்னை போல் நடிப்பேன் என்று கூறி ஏன் பல கம்பெனிகளில் வாய்ப்பு கேட்டு ஏறி இறங்கி கொண்டிருக்கிறாய்?' என கேட்டாராம், அதற்கு சுகுமார், "அப்படியெல்லாம் நான் செய்யவில்லை. ஒரு வாய்ப்பு கிடைத்ததால் நடித்தேன். இனி உங்களை போல் நடிக்க மாட்டேன்" என்று கூறியுள்ளார்.

    பேசி கொண்டிருக்கும் போதே, பின்பக்கம் இருந்து தன்னை சரமாரியாக சிலர் தாக்கியதாகவும், கெஞ்சி கதறி அவர்களிடம் தப்பி வந்ததாகவும் சுகுமார் வேதனை தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வடிவேலு
    திரைப்படம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    வடிவேலு

    துணிவு மற்றும் வாரிசு இரண்டு படங்களும் வெற்றியடைய வேண்டும் - வடிவேலுவின் சமீபத்திய பேட்டி தமிழ் திரைப்படம்
    வடிவேலுவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் வைரலான ட்வீட்
    வடிவேலுவுக்கு முனைவர் பட்டம்: அண்ணா பல்கலைக்கழகத்தை ஏமாற்றிய பலே கில்லாடிகள் தமிழ்நாடு
    20 ஆண்டுகளுக்கும் மேலாக வடிவேலுவை ஒதுக்கிய 'தல' அஜித்: வெளியான உண்மை காரணம் நடிகர் அஜித்

    திரைப்படம்

    கார்த்தியின் அடுத்த படத்தில் இணைகிறாரா அரவிந்த் சுவாமி? இணையத்தில் வைரலாகும் புதுத்தகவல் கார்த்தி
    கார்த்தி நடிக்கும் ஜப்பான் கதை இவரை பற்றியதா? கார்த்தி
    ஆதிபுருஷ் வெளியாகும் திரையரங்குகளில், ஹனுமானுக்கு ஒரு சீட்! தயாரிப்பாளர்களின் வினோத அறிவிப்பு  திரைப்பட அறிவிப்பு
    இராவணன் வேடத்திற்கு நோ சொன்ன 'ராக்கி பாய்' யாஷ் சினிமா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025