NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / பிரபுதேவாவின் தம்பி வீட்டில் எழுந்த சர்ச்சை குறித்த முழு விவரம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரபுதேவாவின் தம்பி வீட்டில் எழுந்த சர்ச்சை குறித்த முழு விவரம்
    நாகேந்திர பிரசாத் ஆட்கள் பூட்டிய வீட்டில், வளர்ப்பு நாய் ஒன்று சிக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

    பிரபுதேவாவின் தம்பி வீட்டில் எழுந்த சர்ச்சை குறித்த முழு விவரம்

    எழுதியவர் Srinath r
    Nov 07, 2023
    06:10 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் நடிகர் பிரபுதேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத், வீட்டில் குத்தகைக்கு இருந்தவர்களை வெளியேற்றிவிட்டு, வீட்டை வெல்டிங் வைத்து பூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னையைச் சேர்ந்த விக்னேஷ், தி.நகர் ஜெயமால் தெருவில், பிரபுதேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத் வீட்டில் குத்தகைக்கு வசித்து வருகிறார்.

    கடந்த 2021 ஆம் ஆண்டு, விக்னேஷ் வீடு தேடிக் கொண்டிருந்தபோது, நடிகர் நாகேந்திர பிரசாத்தின் வீட்டை பார்த்து, அவரிடம் வீடு கேட்டுள்ளார்.

    அதற்கு நாகேந்திர பிரசாத், அந்த வீட்டை ஒரு தனியார் நிறுவனத்திற்கு கேர் டேக்கிங்குக்கு கொடுத்து விட்டதாக கூறியுள்ளார்.

    மேலும் அந்த தனியார் நிறுவனத்திற்கு, ₹25 லட்சம் குத்தகையாக செலுத்தி விட்டு, வீட்டில் தங்கிக் கொள்ளும் படியும் அறிவுறுத்தியுள்ளார்.

    2nd card

    காவல்துறையில் புகார் அளித்த விக்னேஷ்

    அந்த நிறுவனத்திடம் இருந்து மாத வாடகையை, நாகேந்திர பிரசாத் தரப்பினர் வசூல் செய்து கொள்வதாக விக்னேஷ் இடம் தெரிவித்துள்ளனர்.

    ஒரு வருடமாக நாகேந்திர பிரசாத்திற்கு மாத வாடகையாக ₹36,000 வழங்கி வந்த அந்த நிறுவனம், திடீரென வாடகை வழங்குவதை நிறுத்திவிட்டது.

    வாடகை வராததால், வீட்டை விட்டு வெளியேறும்படி விக்னேஷுக்கு, நாகேந்திர பிரசாத் தரப்பினர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.

    இதை அடுத்து நேற்று நாகேந்திர பிரசாத்தின் ஆட்கள், விக்னேஷ் குடும்பத்தினரை வெளியேற்றிவிட்டு, அவர் தங்கியிருந்த வீட்டிற்கு பூட்டு போட்டதாக கூறப்படுகிறது.

    இதனை அடுத்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் விக்னேஷ் புகார் அளித்தார்.

    இந்நிலையில் நாகேந்திர பிரசாத் மற்றும் அவரது மனைவி முன்னிலையில், காவல்துறையினர் இன்று பூட்டை உடைத்து விக்னேஷை உள்ளே அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

    3rd card

    தனியார் நிறுவனத்திற்கும், நாகேந்திர பிரசாத்துக்கும் இருக்கும் தொடர்பு குறித்து போலீஸ் விசாரணை

    மேலும் விக்னேஷ், தான் வழங்கிய ₹25 லட்சத்தை திருப்பி வழங்கினால், வீட்டை காலி செய்வதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

    அதே சமயம் காவல்துறையினர் நாகேந்திர பிரசாத் மற்றும் விக்னேஷ் பணம் வழங்கிய தனியார் நிறுவனத்திற்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா, மோசடி ஈடுபட்டு தலைமறைவான நபர் எங்கே, நாகேந்திர பிரசாத்திற்கு அந்நிறுவனம் எவ்வளவு பணம் வழங்க வேண்டும் உள்ளிட்டவற்றை விசாரித்து வருகின்றனர்.

    நேற்று நாகேந்திர பிரசாத்தின் ஆட்கள், வீட்டை பூட்டிய போது உள்ளே அவரது வளர்ப்பு நாய் சிக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    நடிகர்
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ

    சென்னை

    11 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு ஒருநாள் உலகக்கோப்பை
    அரபிக்கடலில் 'தேஜ்', வங்காள விரிகுடாவில் 'ஹமூன்': இரட்டை புயல்களை எதிர்கொள்ள இருக்கும் இந்தியா வானிலை எச்சரிக்கை
    இன்று தங்கம் வாங்கலாமா? இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் தங்கம் வெள்ளி விலை
    உலக அளவில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் முக்கியமான இடத்தை பிடித்தது சென்னை தமிழ்நாடு

    நடிகர்

    தமிழில் இந்த வார ஓடிடி மற்றும் திரையரங்கு வெளியீடுகள் தமிழ் திரைப்படம்
    லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி லியோ
    #பூஜாஹெக்டே 33- 'பீஸ்ட்' நடிகை பற்றி உங்களுக்கு தெரியாத ஆறு விஷயங்கள் திரைப்படம்
    "சஞ்சய் தத் என்னை அப்பா என்று அழைக்கச் சொன்னார்"- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி லியோ

    காவல்துறை

    ஈரான்: மாஷா அமினியின் மரணம் குறித்து செய்தி சேகரித்த இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு சிறை ஈரான்
    பாஜகவில் இருந்து திடீரென நடிகை கெளதமி விலகியதற்கான காரணம் என்ன?  கெளதமி
    சைலேந்திர பாபுவின் டின்பிஎஸ்சி தலைவர் நியமனத்திற்கான பரிந்துரையை நிராகரித்த ஆளுநர்  ஆர்.என்.ரவி
    'கெளதமியை ஏமாற்றிய நபருக்கும் பாஜகவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை' - அண்ணாமலை  அண்ணாமலை

    காவல்துறை

    திருவண்ணாமலையில் அரசுப் பேருந்து மீது கார் மோதி விபத்து: 7 பேர் பலி  திருவண்ணாமலை
    இந்தியளவில் பாதுகாப்பான மாநகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடம்  கூகுள்
    நிலத்தகராறில் 8 முறை ட்ராக்டர் ஏற்றி கொல்லப்பட்ட இளைஞர் - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ கொலை
    சென்னை வருகிறார் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்  சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025