Loading...
தயவுசெய்து காயப்படுத்திக் கொள்ளாதீர்கள்! லண்டன் கார் பந்தயத்தில் ரசிகர்களுக்கு நடிகர் அஜித் விடுத்த அவசர வேண்டுகோள்
லண்டன் கார் பந்தயத்தில் ரசிகர்களுக்கு நடிகர் அஜித் விடுத்த அவசர வேண்டுகோள்

தயவுசெய்து காயப்படுத்திக் கொள்ளாதீர்கள்! லண்டன் கார் பந்தயத்தில் ரசிகர்களுக்கு நடிகர் அஜித் விடுத்த அவசர வேண்டுகோள்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 11, 2026
06:31 pm

செய்தி முன்னோட்டம்

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தில் பங்கேற்பதற்காக லண்டன் சென்றுள்ள நடிகர் அஜித் குமார், தம்மைக் காணத் திரண்டிருந்த ரசிகர்களுக்கு அவசரப் பாதுகாப்பு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். லண்டனில் அஜித் பங்கேற்கும் பந்தயத்தைக் காணவும், அவரை நேரில் சந்திக்கவும் ஏராளமான ரசிகர்கள் பந்தயக் களத்தின் அருகில் திரண்டனர். இதனால் அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலைக் கண்ட அஜித், ரசிகர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவர்களிடம் உடனடியாகக் கட்டுப்பாட்டுடன் இருக்குமாறு நேரில் கேட்டுக்கொண்டார்.

ரசிகர்களின் பாதுகாப்பு

ரசிகர்களின் பாதுகாப்பை வலியுறுத்திய நடிகர் அஜித்

ரசிகர்களிடம் பேசிய அஜித், "மன்னிக்கவும், நான் மிகவும் முக்கியமான ஒரு பணியை செய்து கொண்டிருக்கிறேன்.

இது தடை செய்யப்பட்ட பகுதி என்பதால் தயவுசெய்து அனைவரும் ஓரமாய் நில்லுங்கள்.

இந்த வழியாக இன்னும் நிறைய அதிவேகக் கார்கள் வரவுள்ளன, தயவுசெய்து உங்களை நீங்களே காயப்படுத்திக் கொள்ளாதீர்கள்." என்று கைகூப்பி வேண்டுகோள் வைத்தார்.

பந்தயக் களத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

பந்தயக் களம்

பந்தயக் களத்தில் உயிருக்குப் பாதுகாப்பு அவசியம்

சர்வதேச அளவிலான கார் பந்தயக் களங்கள் என்பது அதிவேகக் கார்கள் இயங்கும் மிகவும் அபாயகரமான பகுதியாகும்.

இதனால் அங்குள்ள பாதுகாப்பு விதிகளை அனைவரும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.

கார் பந்தயத்தின் போது ஒரு தொழில்முறை வீரராகத் தனது கவனத்தைச் செலுத்தும் அஜித், அதே நேரத்தில் பந்தயப் பாதையில் நின்றிருந்த ரசிகர்களின் பாதுகாப்பிலும் தனிக் கவனம் செலுத்தியது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT