NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / திருமணத் தகராறு குறித்து ஆர்த்தி ரவி 'இறுதி விளக்கம்': "எங்களுக்குள் பிரிவு ஏற்பட காரணம் ஒரு மூன்றாவது நபர்"
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருமணத் தகராறு குறித்து ஆர்த்தி ரவி 'இறுதி விளக்கம்': "எங்களுக்குள் பிரிவு ஏற்பட காரணம் ஒரு மூன்றாவது நபர்"
    ஆர்த்தி ரவி தற்போது தனது 'இறுதி விளக்கத்தை' வெளியிட்டுள்ளார்

    திருமணத் தகராறு குறித்து ஆர்த்தி ரவி 'இறுதி விளக்கம்': "எங்களுக்குள் பிரிவு ஏற்பட காரணம் ஒரு மூன்றாவது நபர்"

    எழுதியவர் Venkatalakshmi V
    May 20, 2025
    05:18 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி இடையே நடைபெற்று வரும் திருமணத் தகராறில், ஆர்த்தி ரவி தற்போது தனது 'இறுதி விளக்கத்தை' வெளியிட்டுள்ளார்.

    இன்று இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட ஒரு நீண்ட பதிவில், தங்களது பிரிவுக்குப் பணமோ அதிகாரமோ காரணமல்ல என்றும், 'மூன்றாவது நபரே' காரணம் என அவர் நேரடியாகக் கூறியுள்ளார்.

    பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதட்டம் போலவே, இந்த விவகாரமும் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த ஆண்டு செப்டம்பரில், ரவி மோகன் தனது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இருவரும் மாறி மாறி குற்றம்சாட்டி அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர்.

    விமர்சனம்

    "இடையில் அந்த மூன்றாவது வெளி நபர்" - ஆர்த்தி ரவியின் கடுமையான விமர்சனம்

    "பணமோ அதிகாரமோ காரணமல்ல. எங்களது வாழ்க்கையில் நுழைந்த மூன்றாவது நபரே எங்களைப் பிரித்தார்" என ஆர்த்தி ரவி குறிப்பிடும் இந்த அறிக்கையில், அவர் வலியுறுத்தியது என்னவெனில், "தங்கள் திருமணத்தை சீரழித்தது இருவருக்குள் இருந்த பிரச்சனைகள் அல்ல; வெளியிலிருந்து வந்த ஒரு மூன்றாம் நபர்"

    விவாகரத்துக்கு முன்பே அந்த நபர் தங்கள் வாழ்வில் நுழைந்ததாகவும், போதுமான ஆதாரங்களோடும் இதை கூறுவதாகவும் அவர் தெரிவித்தார். *

    தன்னை "கட்டுப்படுத்தும் மனைவி" என்ற குற்றச்சாட்டு சுமத்தியதைக் கண்டித்து, "என் கணவரை தீய வழிகளில் இருந்து காப்பாற்றியது என் குற்றமா?" என கேள்வி எழுப்பினார்.

    திட்டமிட்ட நடவடிக்கை

    "வீட்டைவிட்டு வெறுங்கையோடு போகவில்லை- திட்டமிட்ட வெளியேறும் நடவடிக்கை"

    ரவி மோகன் தனது அறிக்கையில், அவர் வீட்டை விட்டு வெறுங்கையோடு வெளியேற்றப்பட்டதாக கூறுவதை ஆர்த்தி மறுத்துள்ளார்.

    "ஐந்து கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் காரில், தேவையான எல்லாம் எடுத்துவிட்டு அவர் திட்டமிட்டு வெளியேறினார் சென்றார்" என தெரிவித்துள்ளார். தனது பிள்ளைகள் தந்தையை சந்திக்க மிகவும் விரும்புகின்றனர் ஆனால் பாதுகாப்பான இடங்களில் மட்டுமே சந்திக்க விருப்பம் தெரிவிக்கிறார்கள் என கூறியுள்ளார்.

    தன்னை 'துன்புறுத்திய மனைவி' என சித்தரிக்க முயற்சிப்பது உண்மைக்கு புறம்பானது என்றும், பிள்ளைகளைத் தந்தையிடமிருந்து அகற்றி வைத்ததாக கூறப்படுவது உண்மையல்ல என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

    "இனி பேச எதுவுமில்லை. நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறட்டும். எனக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன்" என தனது அறிக்கையை முடித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜெயம் ரவி
    திருமணம்
    விவாகரத்து

    சமீபத்திய

    திருமணத் தகராறு குறித்து ஆர்த்தி ரவி 'இறுதி விளக்கம்': "எங்களுக்குள் பிரிவு ஏற்பட காரணம் ஒரு மூன்றாவது நபர்" ஜெயம் ரவி
    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்

    ஜெயம் ரவி

    சுஹாசினி வெளியிட்ட பொன்னியின் செல்வன் படத்தின் காலண்டர் தமிழ் திரைப்படம்
    ஜெயம் ரவி - நயன்தாரா நடிக்கும் 'இறைவன்' பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! திரைப்பட அறிவிப்பு
    ஜெயம் ரவியின் 'அகிலன்' படத்தின் முதல் சிங்கிள் 'துரோகம்' வெளியானது பாடல் வெளியீடு
    பொன்னியின் செல்வன் 2 அப்டேட்: பிடிஎஸ் வீடியோவை வெளியிட்டது தயாரிப்பு குழு திரைப்பட அறிவிப்பு

    திருமணம்

    நடிகை கீர்த்தி சுரேஷிற்கு டிசம்பரில் திருமணமா? இணையத்தில் தீயாய் பரவும் தகவல் கீர்த்தி சுரேஷ்
    இந்தியாவில் அதிகரிக்கும் க்ரே டைவோர்ஸ் வழக்குகள்; அப்படியென்றால் என்ன? ஏஆர் ரஹ்மான்
    இனி திருமணம் கடந்த உறவு குற்றமல்ல; நூறாண்டுகள் கடந்த சட்டத்தை ரத்து செய்தது நியூயார்க் அமெரிக்கா
    ஏ ஆர் ரஹ்மான் சொக்கத் தங்கம்; அவதூறு பரப்ப வேண்டாம்; சாய்ரா பானு வாய்ஸ் நோட் வெளியீடு ஏஆர் ரஹ்மான்

    விவாகரத்து

    தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு விவாகரத்து வழங்கியது குடும்பநல நீதிமன்றம் தனுஷ்
    ஏ.ஆர்.ரஹ்மான்-சாய்ரா பானு மீண்டும் ஒன்று சேரலாம்: சாய்ரா பானுவின் வழக்கறிஞர் ஏஆர் ரஹ்மான்
    கணவர்களுக்கு எதிரான 'தனிப்பட்ட பழிவாங்கலுக்கு' சட்டத்தினை தவறாகப் பயன்படுத்தக்கூடாது: உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    விவாகரத்து வழக்கில் ஜீவனாம்சத்தை தீர்மானிக்க இவை அவசியம்: உச்ச நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு  உச்ச நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025