NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / செபியிடம் உள்ள ரூ.25,000 கோடி சஹாரா முதலீட்டாளர்கள் நிதியானது யாரைச் சேரும்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    செபியிடம் உள்ள ரூ.25,000 கோடி சஹாரா முதலீட்டாளர்கள் நிதியானது யாரைச் சேரும்?
    செபியிடம் உள்ள ரூ.25,000 கோடி சகாரா முதலீட்டாளர்கள் நிதியானது யாரைச் சேரும்?

    செபியிடம் உள்ள ரூ.25,000 கோடி சஹாரா முதலீட்டாளர்கள் நிதியானது யாரைச் சேரும்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Nov 21, 2023
    02:26 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் முக்கியமான வணிகக் குழுமங்களுள் ஒன்றான சஹாரா வணிக குழுமத்தின் நிறுவனர் சுபத்ரா ராய் நீடித்த உடல்நலக் கோளாறுகள் காரணமாக கடந்த வாரம் சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்தார்.

    இந்நிலையில், பத்தாண்டுகளுக்கு முன் சஹாரா வணிகக் குழுமத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்குக் திருப்பியளிக்க செபியிடம் கொடுக்கப்பட்ட ரூ.25,000 கோடி என்னவானது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

    2010-ம் ஆண்டு சஹாரா ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் சஹாரா ஹவுசிங் முதலீட்டு நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்களும் விதிமுறைகளை மீறி OFCD (Optionally Fully Convertible Bonds) முறையில் 3 கோடி முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டியிருக்கிறது.

    இதனைத் தொடர்ந்து இந்த முறைகேடான நிதி திரட்டல் தொடர்பாக அந்த இரு நிறுவனங்கள் மீதும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    வணிகம்

    ரூ.25,000 கோடியை செபியிடம் அளித்த சகாரா குழுமம்: 

    அந்த வழக்கின் முடிவில், சஹாரா குழுமத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு திருப்பயளிக்க வேண்டிய தொகையாக ரூ.25,000 கோடியை செபியிடம் சஹாரா குழுமம் அளிக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.

    அந்நிறுவனங்களில் மேற்கூறிய வகையில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் செபியிடம் விண்ணப்பித்து தங்களுடைய முதலீட்டுப் பணத்தை 15% வட்டியுடன் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அப்போதே அறிவிக்கப்பட்டது.

    ஆனால், 11 ஆண்டுகளுக்கு மேலாகியும் 2.5 முதலீட்டாளர்களுக்கு ரூ.230 கோடி வரையிலான முதலீட்டுப் பணம் மட்டுமே திருப்பியளிக்கப்பட்டதாகத் தெரிவித்தது செபி.

    மேலும், மேற்கூறிய இரு சஹாரா நிறுவனங்களிலும் யார் யார் முதலீடு செய்திருக்கிறார்கள் என்பதனை தாங்களாகக் கண்டறிய முடியவில்லை எனவும் தெரிவித்தது செபி.

    இந்தியா

    முதலீட்டுப் பணத்தை திருப்பியளிக்க நடவடிக்கை: 

    அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் சஹாரா முதலீட்டாளர்களுக்கான முதலீட்டுப் பணத்தைத் திருப்பியளிக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த புதிய இணையப்பக்கம் ஒன்று துவக்கப்பட்டது.

    இதுவரை அந்த இணையப்பக்கத்தின் மூலம் 18 லட்சம் முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டுப் பணத்திற்காக விண்ணப்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

    இதற்கிடையில் மீதமிருக்கும் ரூ.25,000 கோடியை மத்திய அரசு consolidated fund of india கணக்கிற்கு மாற்றும் வழிகளைக் குறித்து பரிசீலனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

    இன்னும் அனைத்து முதலீட்டாளர்களுக்கு பணம் திருப்பயளிக்கப்படாத நிலையில், CFI-க்கும் மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு தான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அப்படியே CFI கணக்கிற்கு அந்தப் பணத்தை மாற்றினாலும், முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை திரும்பப்பெறும் வகையிலான வசதிகளும் சேர்த்தே ஏற்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வணிகம்
    இந்தியா
    வணிக செய்தி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    வணிகம்

    இந்தியாவில் தொலைக்காட்சி விற்பனை வணிகத்தை நிறுத்தும் ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி ரியல்மி
    மீண்டும் வேதாந்தா குழுமத்தின் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டார் அஜய் கோயல் வேதாந்தா
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 24 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 25 தங்கம் வெள்ளி விலை

    இந்தியா

    சல்மான் ருஷ்டி முதன்முதலில் அமைதியை சீர்குலைத்ததற்காக வாழ்நாள் சாதனை விருதை பெற்றார் அமெரிக்கா
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் கொரோனா
    வங்கக்கடலில் உருவாக இருக்கும் 2 புயல்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை  வங்க கடல்
    சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் மரணம்: 3 கோடி மக்களின் 25,000 கோடி ரூபாயின் நிலைமை என்ன? உச்ச நீதிமன்றம்

    வணிக செய்தி

    தங்கம் விலை மீண்டும் தொடர்ந்து உயர்வு - இன்றைய விலை விபரம் தங்கம் வெள்ளி விலை
    சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு - எவ்வளவு தெரியுமா? தொழில்நுட்பம்
    எகிறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    MSI Pulse GL66 கேமிங் லேப்டப் - ப்ளிப்கார்டில் 26,000 தள்ளுபடியில் கிடைக்கிறது! தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025