NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / 'மதிப்பிற்குரிய நாட்டுடனான வர்த்தக ஒப்பந்தம்' நடைபெற உள்ளதாக டொனால்ட் டிரம்ப் சூசகம் 
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    'மதிப்பிற்குரிய நாட்டுடனான வர்த்தக ஒப்பந்தம்' நடைபெற உள்ளதாக டொனால்ட் டிரம்ப் சூசகம் 
    ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தப்போவதாக டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார்

    'மதிப்பிற்குரிய நாட்டுடனான வர்த்தக ஒப்பந்தம்' நடைபெற உள்ளதாக டொனால்ட் டிரம்ப் சூசகம் 

    எழுதியவர் Venkatalakshmi V
    May 08, 2025
    09:24 am

    செய்தி முன்னோட்டம்

    "பெரிய மற்றும் மிகவும் மதிக்கப்படும் நாட்டின்" பிரதிநிதிகளுடன் ஒரு பெரிய ஒப்பந்தம் குறித்து விவாதிக்க இன்று ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார்.

    ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு வாஷிங்டன் நேரப்படி காலை 10 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று டிரம்ப் தனது சமூகவலைத்தள பக்கமான Truth Social-இல் ஒரு பதிவில் தெரிவித்தார். எனினும் இது குறித்து அவர் மேலும் விவரிக்கவில்லை.

    "நாளை காலை 10:00 மணிக்கு, ஓவல் அலுவலகத்தில், ஒரு பெரிய, மிகவும் மதிக்கப்படும் நாட்டின் பிரதிநிதிகளுடன் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் குறித்த பெரிய செய்தி மாநாடு. பலவற்றில் முதன்மையானது," என்று அவர் ட்ரூத் சோஷியலில் எழுதினார்.

    யூகங்கள்

    அது இந்தியாவாக இருக்கக்கூடும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "பெரிய, மிகவும் மதிக்கப்படும்" ஒரு நாட்டோடு வர்த்தக ஒப்பந்தத்தை அறிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    பிசினஸ் டுடே செய்தியின்படி, டிரம்ப் குறிப்பிடும் அந்த நாடு இந்தியாவாக இருக்கலாம் என்ற ஊகங்கள் பரவலாக உள்ளன.

    முன்னதாக இந்த வார தொடக்கத்தில், நீண்ட விவாதத்திற்குப் பிறகு, இங்கிலாந்துடன் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    வரி 

    அமெரிக்கா விதித்த வர்த்தக வரிகளால் திண்டாடும் உலக நாடுகள்

    டொனால்ட் டிரம்ப் வரிகள் தொடர்பான அறிவிப்புகளின் மூலம் உலகளாவிய வர்த்தக போக்கை மாற்றியுள்ளார்.

    ஏப்ரல் 2 ஆம் தேதி ஜனாதிபதி டிரம்ப், பெரும்பாலான நாடுகளுக்கு 10% வரியை விதித்ததிலிருந்து, டிரம்பின் உயர் அதிகாரிகள் வர்த்தக கூட்டாளர்களுடன் தொடர்ச்சியான சந்திப்புகளில் ஈடுபட்டுள்ளனர்.

    டிரம்ப், ஆட்டோமொபைல்கள், எஃகு மற்றும் அலுமினியம் மீது 25% வரிகளையும், கனடா மற்றும் மெக்ஸிகோ மீது 25% வரிகளையும், சீனா மீது 145% வரிகளையும் விதித்தார்.

    இந்த நாடுகளில் பல அமெரிக்கா மீது தண்டனை வரிகளை விதித்தன. வரிவிதிப்புப் போர் இந்தியா உட்பட உலக சந்தைகளை கடுமையாக பாதித்தது, பங்கு மதிப்புகள் அரிப்பு காரணமாக முதலீட்டாளர்கள் பில்லியன் கணக்கான டாலர்களை இழந்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    டொனால்ட் டிரம்ப்
    வர்த்தகம்

    சமீபத்திய

    'மதிப்பிற்குரிய நாட்டுடனான வர்த்தக ஒப்பந்தம்' நடைபெற உள்ளதாக டொனால்ட் டிரம்ப் சூசகம்  அமெரிக்கா
    எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் இடைவிடாத ஷெல் தாக்குதல்களைத் தொடர்கிறது பாகிஸ்தான்
    மதுரையில் இன்று மீனாட்சி திருக்கல்யாணம்: விழாக்கோலம் பூண்ட தூங்காநகரம் மதுரை
    லாகூர், இஸ்லாமாபாத் விமான நிலையங்கள் மீதான வான்வழியை மூடிய பாகிஸ்தான் பாகிஸ்தான்

    அமெரிக்கா

    சீனாவில் குறைந்த விலையில் தயாரிக்கப்படும் அமெரிக்க ஆடம்பர பொருட்கள்; ஊடக அறிக்கை வெளியாகி பரபரப்பு டொனால்ட் டிரம்ப்
    ஏப்ரல் 20இல் ராணுவ சட்டத்தை அமல்படுத்துகிறாரா டொனால்ட் டிரம்ப்? பரபரப்பில் அமெரிக்கா டொனால்ட் டிரம்ப்
    போயிங்கிடம் இருந்து விமானங்கள் வாங்கக் கூடாது; உள்நாட்டு நிறுவனங்களுக்கு சீன அரசு உத்தரவு போயிங்
    இந்தியாவிற்கு நேசக்கரம் நீட்டும் சீனா; 'இந்திய நண்பர்களுக்கு' 85,000 விசாக்கள் வழங்கியது சீனா

    டொனால்ட் டிரம்ப்

    $5 மில்லியன் 'Gold card'ஐ வெளியிட்டார் டிரம்ப்: இந்த அமெரிக்க விசா என்ன வழங்கும் அமெரிக்கா
    டிரம்பின் 'பரஸ்பர வரி' கட்டணங்கள் காரணமாக ஐபோன்களின் விலை 43% அதிகரிக்கக்கூடும் ஐபோன்
    பழிக்கு பழி: அமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு சீனா 34% வரி விதித்துள்ளது அமெரிக்கா
    இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் மீதான டிரம்பின் வரிகள்: உலகளாவிய வாகன உற்பத்தியாளர்களின் ரியாக்ஷன் என்ன? கார்

    வர்த்தகம்

    இந்தியா - பிரிட்டன் இடையே ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை இந்தியா
    இந்தியா - பிரிட்டன் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை; வர்த்தகத்தை மூன்று மடங்காக உயர்த்த திட்டம் வணிக புதுப்பிப்பு
    நியூ இந்தியா கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் ₹25,000 வரை எடுத்துக் கொள்ள ஆர்பிஐ அனுமதி ரிசர்வ் வங்கி
    யுபிஐ கட்டண முறைக்கு பெருகும் வரவேற்பு; 5,000 இருக்கைகளுடன் மும்பையில் உலகளாவிய தலைமையகத்தை அமைக்கிறது என்பிசிஐ யுபிஐ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025