NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / 2,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு திடீர் ட்ரான்ஸ்ஃபர் அறிவிப்பை வெளியிட்ட டிசிஎஸ் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    2,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு திடீர் ட்ரான்ஸ்ஃபர் அறிவிப்பை வெளியிட்ட டிசிஎஸ் 
    2,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு திடீர் ட்ரான்ஸ்ஃபர் அறிவிப்பை வெளியிட்ட டிசிஎஸ்

    2,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு திடீர் ட்ரான்ஸ்ஃபர் அறிவிப்பை வெளியிட்ட டிசிஎஸ் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 16, 2023
    08:20 am

    செய்தி முன்னோட்டம்

    IT ஊழியர் சங்கமான Nascent Information Technology Employees Senate (NITES) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, Tata Consultancy Services (டிசிஎஸ்) தன்னுடைய பல்வேறு கிளைகளில் உள்ள 2,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு இடமாற்ற அறிவிப்புகளை முன்னறிவிப்பின்றி வெளியிட்டுள்ளது.

    ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து ஊழியர்கள் இந்த மின்னஞ்சல்களைப் பெறத் தொடங்கியுள்ளனர்.

    மேலும், இந்த ட்ரான்ஸ்ஃபர் உத்தரவிற்கு இணங்கத் தவறியவர்கள், ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எதிர்கொள்வார்கள் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக Moneycontrol தெரிவிக்கிறது .

    டிசிஎஸ் நிறுவனம், தனது ஊழியர்களை வாரத்தில் ஐந்து நாட்களுக்கு அலுவலகத்திற்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்ட ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதனை தொடர்ந்து, உரிய அறிவிப்பு இன்றி கட்டாய இடமாற்றம் செய்யப்படுவதாக டிசிஎஸ் நிறுவன ஊழியர்கள், NITES-யிடம் புகார் அளித்துள்ளனர்.

    card 2

    மத்திய அமைச்சரவையிடம் புகார் தெரிவித்துள்ள தொழிற்சங்கம் 

    NITES, இதுவரை குறைந்தபட்சம் 180 ஊழியர்களிடமிருந்து புகார்களைப் பெற்றுள்ளதாக கூறுகிறது. அதில், TCS ஊழியர்களை சரியான அறிவிப்பு அல்லது ஆலோசனையின்றி இடமாற்றம் செய்ய வற்புறுத்துகிறது என்றும், இதனால் அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் பெரும் சிரமம் ஏற்படுகிறது என்றும் தெரிவித்துள்ளதாக கூறுகிறது.

    இதனையடுத்து, நெறிமுறையற்ற பரிமாற்ற நடைமுறைகளுக்காக டிசிஎஸ் மீது நீட்ஸ் தொழிற்சங்கம், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளது.

    இது குறித்து பேசிய NITES தலைவர் ஹர்பிரீத் சிங் சலுஜா, "இந்த கட்டாய இடமாற்றங்கள் ஊழியர்களுக்கு ஏற்படுத்தும் நிதி நெருக்கடிகள், குடும்ப இடையூறுகள், மன அழுத்தம் மற்றும் கவலைகள் அனைத்தையும் நிறுவனம் புறக்கணிக்கிறது மேலும் அவர்களின் உரிமைகளை மீறுகிறது" என்றார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டிசிஎஸ்

    சமீபத்திய

    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025
    இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்? இந்திய ராணுவம்

    டிசிஎஸ்

    ரூ.15,000 கோடி மதிப்புடைய BSNL ஒப்பந்தத்தை கைப்பற்றிய டாடா குழுமம்! டாடா
    அலுவலகம் வந்து பணி செய்யாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறதா டிசிஎஸ்? இந்தியா
    டிசிஎஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓ கிருத்திவாசன்.. யார் இவர்? இந்தியா
    டிசிஎஸ் நிறுவனத்தில் பணியில் இருந்து அதிகளவில் விலகும் பெண் பணியாளர்கள்.. ஏன்? இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025