NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் மரணம்: 3 கோடி மக்களின் 25,000 கோடி ரூபாயின் நிலைமை என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் மரணம்: 3 கோடி மக்களின் 25,000 கோடி ரூபாயின் நிலைமை என்ன?
    2015ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டது

    சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் மரணம்: 3 கோடி மக்களின் 25,000 கோடி ரூபாயின் நிலைமை என்ன?

    எழுதியவர் Sindhuja SM
    Nov 15, 2023
    05:26 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா: சஹாரா குழுமத்தின் உரிமையாளர் சுப்ரதா ராய் நேற்று மரணமடைந்த நிலையில், 3 கோடி மக்களிடம் மோசடி செய்யப்பட்ட 25,000 கோடி ரூபாயின் நிலைமை என்ன என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.

    நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சுப்ரதா ராய்(75) கார்டியோஸ்பிரேட்டரி அடைப்பு காரணமாக நேற்று இரவு 10.30 மணியளவில் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் காலமானார்.

    சிட்-பண்ட்டுகள் மூலம் மக்களிடமிருந்து எந்த பணத்தையும் பெறக்கூடாது என்று சஹாரா இந்தியா பைனான்சியல் கார்ப்பரேஷன் லிமிடெட்(SIFCL) நிறுவனத்திற்கு 2008ஆம் ரிசர்வ் வங்கி தடை விதித்திருந்தது.

    ஆனால், அந்த தடையையும் மீறி SIFCL மக்களிடம் இருந்து பணத்தை பெற்றது.

    இதனால், 2015ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டது

    டோஜிவ்கில்கண்

    15% வட்டியுடன் மோசடி செய்த பணத்தை திருப்பி வழங்க உத்தரவு 

    மேலும், அந்த நிறுவனம் மக்களிடம் பெற்ற பணத்தை திரும்ப செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

    இதற்கிடையில், 2008 முதல் 2011 வரை, சஹாரா குழுமத்தை சேர்ந்த சஹாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்ப்பரேஷன்(SIREC) மற்றும் சஹாரா ஹவுசிங் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன்(SHIC) ஆகிய இரண்டு நிறுவனங்களும் 3 கோடி மக்களிடம் இருந்து 17,656 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை கணக்கு வைக்காமல் தனிப்பட்ட முறையில் பெற்றது வெளிச்சத்திற்கு வந்தது.

    இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வருடத்திற்கு 15% வட்டியுடன் மக்களிடம் பெற்ற பணம் திருப்பி செலுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

    ஆனால், 95 சதவீதத்துக்கும் அதிகமான முதலீட்டாளர்களுக்கு நேரடியாக பணத்தை திருப்பிச் செலுத்திவிட்டதாக சஹாரா குழுமம் கூறியது.

    டபிவ்ல்க்மா

    பணத்தை திரும்ப பெற என்ன செய்ய வேண்டும்?

    எனினும், முதலீட்டாளர்களுக்கு பணத்தைத் திருப்பி செலுத்துவதற்காக, ரூ.24,000 கோடியை SEBIயிடம்(மூலதனச் சந்தை கட்டுப்பாட்டாளர்) டெபாசிட் செய்யும்படி சஹாரா குழுமத்திடம் கேட்கப்பட்டது.

    இந்த பிரச்சனையில் பணத்தை இழந்த முதலீட்டாளர்களுக்கு 11 ஆண்டுகளில் 138.07 கோடி ரூபாயை SEBI திருப்பி அளித்துள்ளது.

    இதற்கிடையில், பணத்தை திருப்பிச் செலுத்துவதற்காக சிறப்பாக திறக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை ரூ.25,000 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

    மார்ச் 31, 2023 நிலவரப்படி, வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட மொத்தத் தொகை சுமார் ரூ.25,163 கோடி ஆகும் என்று SEBI தெரிவித்துள்ளது.

    சஹாராவின் 4 நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் மத்திய அரசின் CRCS Sahara portal மூலம் விண்ணப்பித்து தங்களது பணத்தை வட்டியுடன் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    சிரஞ்சீவியுடன் நடிக்கும் படத்திற்கு நயன்தாராவின் சம்பளம் இவ்வளவா? நயன்தாரா
    போர் நிறுத்தத்திற்குப் பிறகு, வாரத்தின் முதல்நாளில் வளர்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள் பங்குச் சந்தை
    எல்லை மற்றும் கடலோர கண்காணிப்புக்காக எந்நேரமும் இயங்கும் 10 செயற்கைக்கோள்கள்; இஸ்ரோ தலைவர் வெளியிட்ட தகவல் இஸ்ரோ
    இந்தியா, பாகிஸ்தான் உயர் ராணுவ அதிகாரிகள் இன்று நண்பகல் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் இந்தியா

    இந்தியா

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் - போட்டியிலிருந்து வெளியேறியது ஆப்கானிஸ்தான்  ஆப்கானிஸ்தான்
    Sports Round Up: ஆஃப்கானிஸ்தானை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா; இடைநீக்கம் செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட்; முக்கிய விளையாட்டுச் செய்திகள் ஒருநாள் உலகக்கோப்பை
    பிரதமர் மோடியின் உரை இடம்பெற்றிருந்த 'சிறுதானிய பாடல்' கிராமி விருதுக்கு பரிந்துரை  பிரதமர் மோடி
    இந்தியாவில் கடந்த அக்டோபரில் உயர்ந்த வாகன உற்பத்தி மற்றும் விற்பனை  ஆட்டோமொபைல்

    உச்ச நீதிமன்றம்

    காவிரி விவகாரம் - செப்.26ல் கர்நாடகா தலைநகர் பெங்களூரில் முழு அடைப்பு போராட்டம்  தமிழ்நாடு
    முதல்முறையாக, உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய காதுகேளாத மற்றும் வாய் பேச முடியாத வழக்கறிஞர் இந்தியா
    கர்நாடகாவில் 'பந்த்' - தமிழக எல்லை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு  தமிழக அரசு
    காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டத்தில் கடும் வாக்குவாதம் - 3,000 கனஅடி நீர் திறக்க உத்தரவு காவிரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025