NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / நடப்பு நிதியாண்டில் மூன்றாம் முறையாக தங்கக் கடன் பத்திரங்களை வெளியிட்டிருக்கும் ரிசர்வ் வங்கி
    அடுத்த செய்திக் கட்டுரை
    நடப்பு நிதியாண்டில் மூன்றாம் முறையாக தங்கக் கடன் பத்திரங்களை வெளியிட்டிருக்கும் ரிசர்வ் வங்கி
    நடப்பு நிதியாண்டில் மூன்றாம் முறையாக தங்கக் கடன் பத்திரங்களை வெளியிட்டிருக்கும் ரிசர்வ் வங்கி

    நடப்பு நிதியாண்டில் மூன்றாம் முறையாக தங்கக் கடன் பத்திரங்களை வெளியிட்டிருக்கும் ரிசர்வ் வங்கி

    எழுதியவர் Prasanna Venkatesh
    Dec 19, 2023
    10:02 am

    செய்தி முன்னோட்டம்

    2023-24 நிதியாண்டிற்கான III சீரிஸ் தங்கக் கடன் பத்திரத்தை (Sovereign Gold Bond) வெளியிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி. டிசம்பர் 18ம் தேதி முதல் டிசம்பர் 22ம் தேதி வரை இந்தத் தங்கக் கடன் பத்திரங்களுக்கு முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    விண்ணப்பிப்பவர்களுக்கு டிசம்பர் 28ம் தேதி தங்கக் கடன் பத்திரங்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. இந்த 2023ம் ஆண்டு மட்டும் 13% வரை தங்க விலை உயர்ந்திருக்கிறது.

    பிற பயன்பாடுகளுக்காக இன்றி, வெறும் முதலீட்டுக்காக மட்டும் தங்கம் வாங்கும் முதலீட்டாளர்கள், அரசு ஆதரவு பெற்ற இந்தத் தங்கக் கடன் பத்திரங்களைப் பரிசீலனை செய்யலாம்.

    தங்கம்

    தங்கக் கடன் பத்திரத்திற்கான விலை: 

    இன்றைக்கு 24 காரட் தங்கம் கிராமிற்கு ரூ.6,311 விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தங்கக் கடன் பத்திர திட்டத்தின் கீழ் கிராமை ரூ.6,199 விலையில் வாங்க முடியும் (தங்கமாக அல்ல கடன் பத்திரமாக).

    இணைய வசதி முலம் பணம் செலுத்துபவர்களுக்கு கூடுதலாக கிராமுக்கு ரூ.50 சலுகையும் வழங்கப்படுகிறது.

    தங்க விலை உயர்வினால் கிடைக்கும் லாபத்தைத் தவிர்த்து, வருடத்திற்கு 2.50% வட்டியும் இந்த தங்கக் கடன் பத்திரத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒரு நபர் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ஒரு கிராமில் இருந்து, அதிகபட்சம் 4 கிலோ வரையிலான மதிப்பிற்கு தங்கக் கடன் பத்திரங்களை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    முதலீடு

    தங்கக் கடன் பத்திரத்தை தங்கமாக மாற்ற முடியுமா: 

    எட்டு ஆண்டு முதிர்வு காலத்துடன் வழங்கப்படும் தங்கக் கடன் பத்திரத்தை எக்காரணத்தைக் கொண்டு தங்கமாக மாற்ற இயலாது.

    எட்டு ஆண்டு முதிர்வு காலத்திற்கு முன்பு, வாங்கியதில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டுக் கொள்ள முடியும். மேலும், இடையில் பணத்தேவை இருந்தால் இரண்டாம் நிலை சந்தைகளிலும் நம்முடைய தங்கப் பத்திரங்களை விற்பனை செய்யும் வாய்ப்புகள் இருக்கின்றன.

    இதுதவிர, சாதாரண தங்கத்தைப் போலவே, இந்தத் தங்கக் கடன் பத்திரங்களையும் அடமானம் வைத்தும் நம்மால் பணம் திரட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    தங்கக் கடன் பத்திரங்களுக்கு வழங்கப்படும் வருடாந்திர வட்டியானது, ஒரு நபரின் ஒட்டுமொத்த வருவாயுடன் சேர்க்கப்பட்டு, அதன் பிறகு உரிய வரி கணக்கிடப்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    முதலீடு
    ரிசர்வ் வங்கி

    சமீபத்திய

    இந்தியாவின் தேசிய மொழி என்ன என்று ஸ்பெயினில் கேட்டவருக்கு MP கனிமொழி அளித்த நச் பதில்! கனிமொழி
    பென்ட்லியின் மிகவும் சக்திவாய்ந்த எஸ்யூவி வெளியாகியுள்ளது: விவரங்கள் இதோ எஸ்யூவி
    வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்வதற்கான மத்திய அரசின் வெப்சைட் இந்த வாரத்தில் தொடங்கப்படவுள்ளது வக்ஃப் வாரியம்
    தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி அதிகரிக்க வாய்ப்பு தமிழ்நாடு

    முதலீடு

    சிலிக்கான் வேலி வங்கி திவால்.. இந்தியாவில் ஏற்படுத்திய பின்விளைவுகள் என்ன?  அமெரிக்கா
    அதானி பங்குகளில் முதலீட்டை அதிகரித்திருக்கும் எல்ஐசி!  பங்குச் சந்தை
    அட்சய திருதியை 2023: சரியான தங்க நகைகளை எப்படி தேர்வு செய்வது? தங்கம் வெள்ளி விலை
    அஞ்சல் நிலையங்களா? வங்கிகளா? எங்கு நிரந்தர வைப்புநிதி கணக்கு தொடங்குவது?  வங்கிக் கணக்கு

    ரிசர்வ் வங்கி

    ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரூ.2,000 நோட்டுக்கள் வைத்திருப்போர் வங்கியில் டெபாசிட் செய்ய பான் எண் கட்டாயம் இந்தியா
    2000 ரூபாய் திரும்பப்பெறும் அறிவிப்பால் பொருளாதாரத்தில் என்ன விதமான மாற்றங்கள் ஏற்படும்? இந்தியா
    கடந்த நிதியாண்டில் பாதியாகக் குறைந்த வங்கி மோசடி மதிப்பு.. ரிசர்வ் வங்கியின் அறிக்கை! இந்தியா
    இந்தியாவில் அதிகரிக்கும் போலி ரூ.500 நோட்டுகள் - அதிர்ச்சி தகவல்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025