LOADING...
பெட்ரோல், டீசல் விலை உயர்வு; லிட்டருக்கு ரூ.3 அதிகரிப்பு
பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு; லிட்டருக்கு ரூ.3 அதிகரிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
May 15, 2026
07:15 am

செய்தி முன்னோட்டம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதைத் தொடர்ந்து, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளன. இந்த விலை உயர்வு இன்று (மே 15, 2026) முதல் அமலுக்கு வருகிறது. மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழலால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், கடந்த 11 வாரங்களாக விலையை மாற்றாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது நஷ்டத்தைத் தவிர்க்க இந்த உயர்வை அறிவித்துள்ளன. புதிய பெட்ரோல் விலை (லிட்டருக்கு): டெல்லி: ரூ. 97.77 சென்னை: ரூ. 103.67 மும்பை: ரூ. 106.68 கொல்கத்தா: ரூ. 108.74

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விலை உயர்வு

விலை உயர்வுக்கு என்ன காரணம்?

பிப்ரவரி மாதத்தில் ஒரு பேரல் 69 டாலராக இருந்த இந்திய கச்சா எண்ணெய் இறக்குமதி விலை, தற்போது 113-114 டாலராக அதிகரித்துள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையிலான பதற்றமான சூழலால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் நீண்ட நாட்களாக விலையை உயர்த்தாமல் நஷ்டத்தைச் சந்தித்து வந்தன. தற்போது அந்தச் சுமையின் ஒரு பகுதியை மக்கள் மீது சுமத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது ரூ. 3 உயர்த்தப்பட்டுள்ள நிலையில், வரும் நாட்களில் கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்து மேலும் விலை உயர்வு இருக்கலாம் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Advertisement