
ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியரான சபீஹ் கான் தேர்வு
செய்தி முன்னோட்டம்
ஆப்பிளின் தலைமை இயக்க அதிகாரி(COO) ஜெஃப் வில்லியம்ஸ் தனது ஓய்வை அறிவித்துள்ளார், இது தொழில்நுட்ப நிறுவனத்தில் ஒரு பெரிய தலைமை மாற்றத்தைக் குறிக்கிறது. வில்லியம்ஸ் இந்த மாதம் தனது COO பதவியில் இருந்து விலகுவார் என்று ஆப்பிள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அவர் வெளியேறும் வரை வடிவமைப்பு குழு மற்றும் சுகாதார முயற்சிகளை தொடர்ந்து வழிநடத்துவார். அவருக்குப் பிறகு, 2019ஆம் ஆண்டில், அதன் நிர்வாகக் குழுவில் செயல்பாடுகளின் மூத்த துணைத் தலைவராக இணைந்த 30 ஆண்டுகால ஆப்பிள் அனுபவமுள்ள சபிஹ் கான் பதவியேற்பார். உலகத் தொழில்நுட்ப துறையின் முன்னணி நிறுவனமான ஆப்பிளில், ஒரு இந்தியர் புதிய முக்கிய பொறுப்பை ஏற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் இந்த மாத இறுதியில் அதிகாரபூர்வமாக புதிய பொறுப்பை ஏற்கவுள்ளார்.
விவரங்கள்
யார் இந்த சபிஹ் கான்?
உத்தரபிரதேசம் மாநிலத்தின் மொராதாபாத் நகரத்தில் பிறந்த சபிஹ் கான், 1966ஆம் ஆண்டு தனது பள்ளிப் படிப்பின்போது சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தார். பின்னர், உயர்கல்விக்காக அமெரிக்கா சென்றார். அவர், டப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் பொறியியலில் இளங்கலைப் பட்டங்களை ரென்சீலர் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட்டில், பொறியியலில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றுள்ளார். ஆப்பிள் வாட்ச் உற்பத்தியை மேற்பார்வையிட்டு வரும் சபிஹ் கானின், நிறுவன வளர்ச்சியில் செய்த முக்கிய பங்களிப்புகள் காரணமாகவே, நிறுவனத்தின் மேலாண்மை குழுவில் அவர் நம்பிக்கையான தலைவராக கருதப்படுகிறார். இந்த நியமனம், உலகளாவிய நிறுவனங்களில் இந்திய வம்சாவளியினர் முக்கிய பொறுப்புகளை வகிக்கத் தொடங்கியதற்கான மேலும் ஒரு முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது.