NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஐந்தாவது வாரமாக சரிவு; ஆர்பிஐ தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஐந்தாவது வாரமாக சரிவு; ஆர்பிஐ தகவல்
    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஐந்தாவது வாரமாக சரிவு

    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஐந்தாவது வாரமாக சரிவு; ஆர்பிஐ தகவல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 08, 2024
    07:10 pm

    செய்தி முன்னோட்டம்

    நவம்பர் 1 ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2.6 பில்லியன் டாலர் குறைந்து 682.13 பில்லியன் டாலராக உள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) வெளியிட்ட தரவு காட்டுகிறது.

    இதன் மூலம் செப்டம்பர் இறுதியில் சாதனை அளவாக 700 பில்லியன் டாலரை தாண்டிய கையிருப்பு, பின்னர் தொடர்ந்து ஐந்தாவது வாரமாக சரிவை சந்தித்துள்ளது.

    எனினும், அந்நிய செலாவணி கையிருப்பில் ஒரு பகுதியாக இருக்கும் தங்க இருப்பு, வாரத்தில் $1.2 பில்லியன் அதிகரித்து $69.8 பில்லியனாக உள்ளது என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

    புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் தங்கம் வாங்குவது அதிகரித்துள்ளது. தொழில் வல்லுனர்களின் கூற்றுப்படி, தங்கம் இப்போது பாதுகாப்பான சொத்தாக செயல்படுகிறது.

    தங்கம்

    தங்கம் கையிருப்பு அதிகரிப்பு

    இந்தியாவில் பணவீக்கம் மிதமானதாக இருந்தாலும், தங்கம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பில் தங்கத்தின் பங்கு 2018 முதல் 210 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பர் மாத இறுதியில் 704.885 பில்லியன் டாலராக உயர்ந்து உலகளவில் சீனா, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்திற்கு அடுத்தபடியாக அந்நிய செலாவணி கையிருப்பு அளவில் நாட்டை 4 வது இடத்திற்கு கொண்டு சென்றது.

    நடப்பு நிதியாண்டில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஒட்டுமொத்தமாக $34.5 பில்லியன் உயர்ந்துள்ளது.

    இது ரிசர்வ் வங்கியின் படி, 11.2 மாதங்களுக்கு இறக்குமதியை ஈடுகட்ட போதுமானது. இது பொருளாதாரத்தின் வலுவான மேக்ரோ பொருளாதார அடிப்படைகளை பிரதிபலிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஆர்பிஐ
    ரிசர்வ் வங்கி
    பொருளாதாரம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இந்தியா

    சதய விழா 2024 ஸ்பெஷல்: ராஜராஜ சோழனை விட சிறந்தவரா ராஜேந்திர சோழன்? ஓர் ஒப்பீடு ராஜ ராஜ சோழன்
    காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக சைபர் கண்காணிப்பு; இந்தியா மீது கனடா குற்றச்சாட்டு காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, எல்லையில் மீண்டும் ரோந்து பணிகளை தொடங்கின இந்திய மற்றும் சீன ராணுவம் இந்தியா-சீனா மோதல்
    மாருதி சுஸூகியின் முதல் எலக்ட்ரிக் கார் உற்பத்தி 2025இல் தொடக்கம் எனத் தகவல் எலக்ட்ரிக் கார்

    ஆர்பிஐ

    50 வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்திய குடும்பங்களின் சேமிப்பு அளவு வீழ்ச்சி: ஆர்பிஐ  வணிகம்
    12 ஆயிரம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக ஆர்பிஐ தகவல் இந்தியா
    கடைசி தேதிக்கு பிறகும் ₹2,000 நோட்டுகள் கைவசம் இருக்கிறதா? வங்கியிலிருந்து பணம் பெற 2 வழிகள் ரிசர்வ் வங்கி
    பிப்., 29க்கு பிறகு Paytm Payments Bank பரிவர்த்தனைகள் நிறுத்தப்படும் என அறிவிப்பு ரிசர்வ் வங்கி

    ரிசர்வ் வங்கி

    ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாதது தொடர்பான புதிய விதிகள் இந்தியா
    பிப்ரவரி 29க்குப் பிறகு உங்கள் Paytm FASTags என்னவாகும்? ஆர்பிஐ
    ரிசர்வ் வங்கியின் தடைக்கு மத்தியில் பேடிஎம் சிஇஓ-வுக்கு அரசாங்கம் வழங்கிய ஆலோசனை  நிர்மலா சீதாராமன்
    ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாகத் தொடரும்: ரிசர்வ் வங்கி ஆர்பிஐ

    பொருளாதாரம்

    சிங்கப்பூரில் வீடு வாங்குவதை விட கார் வாங்குவது காஸ்ட்லி!- ஏன் தெரியுமா? கார்
    4வது முறையாக ரெப்போ ரேட்டில் மாற்றம் செய்யாத ரிசர்வ் வங்கி ரிசர்வ் வங்கி
    இந்தியாவை திசை திருப்பும் முயற்சி அர்த்தமற்றது- மேற்கு உலகுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை பிரதமர்
    பெண் தொழிலாளர்கள் பற்றிய புரிதலை மேம்படுத்திய அமெரிக்க அறிஞருக்கு  பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஸ்வீடன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025