NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / ஏப்ரல்-ஆகஸ்ட் காலத்தில் 4.35 டிரில்லியன் ரூபாய் நிதிப் பற்றாக்குறை; மத்திய அரசு தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஏப்ரல்-ஆகஸ்ட் காலத்தில் 4.35 டிரில்லியன் ரூபாய் நிதிப் பற்றாக்குறை; மத்திய அரசு தகவல்
    4.35 டிரில்லியன் ரூபாய் நிதிப் பற்றாக்குறை; மத்திய அரசு தகவல்

    ஏப்ரல்-ஆகஸ்ட் காலத்தில் 4.35 டிரில்லியன் ரூபாய் நிதிப் பற்றாக்குறை; மத்திய அரசு தகவல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 30, 2024
    05:13 pm

    செய்தி முன்னோட்டம்

    2024-25 நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் இந்தியாவின் நிதிப்பற்றாக்குறை ரூ.4.35 டிரில்லியனாக உள்ளதாக மத்திய அரசு திங்கட்கிழமை (செப்டம்பர் 30) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது நடப்பு நிதியாண்டிற்கான மொத்த மதிப்பீட்டில் 27 சதவீதம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தரவுகளின்படி, இந்த காலகட்டத்திற்கான நிகர வரி வரவுகள் ரூ. 8.74 டிரில்லியன் அல்லது ஆண்டு இலக்கில் 34 சதவீதம் ஆக உள்ளது.

    இந்த காலகட்டத்தில் அரசின் மொத்த செலவினம் ரூ.16.52 டிரில்லியன் அல்லது ஆண்டு இலக்கில் சுமார் 34 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.16.72 டிரில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    செலவு குறைவு

    பொதுத் தேர்தல்கள் காரணமாக குறைந்த அரசின் செலவு

    முதல் ஐந்து மாதங்களில், மத்திய அரசின் மூலதனச் செலவு அல்லது உள்கட்டமைப்பை பலப்படுத்துவதற்கான செலவு 3.01 டிரில்லியன் ரூபாய் அல்லது ஆண்டு இலக்கில் 27 சதவீதம் ஆக இருந்துள்ளது.

    இது முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியில் ரூ.3.74 டிரில்லியனாக இருந்தது.

    கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் முழுமையாக மக்களவைத் தேர்தலை நாடு எதிர்கொண்டதால், உள்கட்டமைப்புகளில் அதிக அளவு செலவு செய்யப்படவில்லை என்பதால், செலவு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்திய அரசாங்கம் தனது சமீபத்திய பட்ஜெட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.9 சதவீதமாக தனது நிதிப் பற்றாக்குறை இலக்கை நிர்ணயித்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் 5.6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    இந்தியா
    நிதியாண்டு
    வர்த்தகம்

    சமீபத்திய

    NDA கூட்டணியில் ஓ.பி.எஸ்., மற்றும் இ.பி.எஸ். இருவரும் தொடர்கிறார்கள்: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நயினார் நாகேந்திரன்
    துருக்கி மற்றும் அஜர்பைஜானுடன் எந்த வணிக உறவும் கிடையாது; அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு முடிவு வர்த்தகம்
    பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழிக்க வெறும் 23 நிமிடங்கள் தான்; ராஜ்நாத் சிங் அதிரடி ராஜ்நாத் சிங்
    சீன, பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவின் பிரம்மோஸுக்கு இணையாக இல்லை: அமெரிக்க போர் நிபுணர் இந்தியா

    மத்திய அரசு

    தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது! தமிழ்நாடு
    பாஸ்போர்ட் சேவை இணையதளம் அடுத்த 3 நாட்கள் இயங்காது; மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு பாஸ்போர்ட்
    இந்தியா முழுவதும் 12 தொழில்துறை ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல்  இந்தியா
    ஆதார் அடிப்படையில் அனுமதி; யுபிஎஸ்சி தேர்வில் ஆள்மாறாட்டத்தைத் தடுக்க மத்திய அரசு அதிரடி முடிவு யுபிஎஸ்சி

    இந்தியா

    விடுதலையாகிறார் செந்தில் பாலாஜி; ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜி
    தொடர்ந்து ஐந்தாவது நாளாக புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச் சந்தைகள் பங்குச் சந்தை
    விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2,000; 18வது தவணை பிஎம் கிசான் சம்மன் நிதி அக்டோபர் 5ஆம் தேதி வெளியீடு விவசாயிகள்
    உலக சுற்றுலா தினம்: இந்தியாவில் நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 சுற்றுலா இடங்கள் சுற்றுலா

    நிதியாண்டு

    இந்த ஆண்டு எப்போது வருமான வரி தாக்கல் செய்வது?  வருமான வரி அறிவிப்பு
    இன்று வருமான வரித் தாக்கல் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்? வருமான வரி விதிகள்
    கடந்த நிதியாண்டில் வைப்பு நிதிக்கான வட்டியை வழங்கத் தொடங்கிய EPFO அமைப்பு.. சரிபார்ப்பது எப்படி? வட்டி விகிதம்
    முழுக்கால பட்ஜெட்டுக்கும், இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடருக்கும் என்ன வித்தியாசம்? நாடாளுமன்றம்

    வர்த்தகம்

    இந்திய மசாலாப் பொருட்களின் வரலாறு இந்தியா
    ரூ.400 கோடி முதலீட்டில் தமிழகத்தில் தங்களது சேவையை விரிவுபடுத்துகிறது மேக்சிவிஷன் தமிழ்நாடு
    இந்தியா-கனடா: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஏன் மோசமடைந்தன? கனடா
    "கனடா விசாரணையை முடிக்க இந்தியா ஆதாரம் கேட்கிறது" - கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025