NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி 2.6 பில்லியன் டாலர்களாக உயர்வு; மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளர்கள் அமெரிக்கா, பிரான்ஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி 2.6 பில்லியன் டாலர்களாக உயர்வு; மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளர்கள் அமெரிக்கா, பிரான்ஸ்
    இந்தியாவின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளர்களாக மாறிய அமெரிக்கா, பிரான்ஸ்

    இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி 2.6 பில்லியன் டாலர்களாக உயர்வு; மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளர்கள் அமெரிக்கா, பிரான்ஸ்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 28, 2024
    05:33 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி 2023-24 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவு ₹21,083 கோடியை ($2.6 பில்லியன்) எட்டியுள்ளது.

    இந்த காலகட்டத்தில் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஆர்மீனியா ஆகிய நாடுகள் இந்திய ஆயுதங்களை அதிக அளவில் இறக்குமதி செய்தன.

    ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் மற்றும் பினாகா பல ஏவுகணை ராக்கெட் அமைப்புகள் போன்ற ஆயுத அமைப்புகளுக்கான இந்தியாவின் மிகப்பெரிய வாடிக்கையாளராக ஆர்மீனியா மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கடந்த நான்கு ஆண்டுகளில், ஆர்மீனியா பல்வேறு ராணுவ தயாரிப்புகளுக்காக இந்தியாவுடன் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

    ஏவுகணைகள், பீரங்கித் துப்பாக்கிகள், ராக்கெட் அமைப்புகள், ஆயுதங்களைக் கண்டறியும் ரேடார்கள், புல்லட்-ப்ரூஃப் உடைகள் மற்றும் இரவு நேரப் பார்வைக் கருவிகள் ஆகியவை இதில் அடங்கும்.

    அமெரிக்கா

    அமெரிக்காவுக்கு உதிரி பாகங்கள் ஏற்றுமதி

    போயிங் மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் போன்ற முக்கிய நிறுவனங்களுடன், விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களுக்கான பிற பாகங்களை, இந்திய உற்பத்தியாளர்களிடமிருந்து அமெரிக்கா முக்கியமாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்கிறது.

    மறுபுறம், பிரான்ஸ் பாதுகாப்புத் துறைக்காக இந்தியாவிலிருந்து அதிக அளவு மென்பொருள் மற்றும் மின்னணு உபகரணங்களை இறக்குமதி செய்கிறது.

    இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி இப்போது உலகளவில் 100 நாடுகளுக்கு விரிவடைந்துள்ளது.

    ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகள், டோர்னியர்-228 விமானங்கள், பீரங்கி துப்பாக்கிகள், ராடார்கள், ஆகாஷ் ஏவுகணைகள், பினாகா ராக்கெட்டுகள் மற்றும் கவச வாகனங்கள் ஆகியவை அடங்கும்.

    இதற்கிடையே, ஆகாஷ் ஏவுகணை அமைப்பின் மேம்பட்ட வகைகளை இந்தியாவுடன் இணைந்து தயாரிப்பதில் பிரேசில் ஆர்வம் காட்டி வருகிறது.

    இறக்குமதி

    உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதி நாடாக இந்தியா

    2019 முதல் 2024 வரை உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக இந்தியா இருந்தாலும், தனது ஆத்மநிர்பர் பாரத் முன்முயற்சியின் கீழ், உள்நாட்டு பாதுகாப்பு தொழில்துறை தளத்தை விரிவுபடுத்துகிறது.

    நாட்டின் பாதுகாப்பு-தொழில்துறை தளத்தில் இப்போது 430 உரிமம் பெற்ற நிறுவனங்கள் மற்றும் தோராயமாக 16,000 எம்எஸ்எம்இ நிறுவனங்கள் உள்ளன.

    இதற்கிடையே, இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி 2023-24ல் சாதனை அளவாக ₹1.2 லட்சம் கோடியை எட்டியது. 50,000 கோடி ஆயுத ஏற்றுமதி மூலம் 2028-29க்குள் இதை ₹3 லட்சம் கோடியாக உயர்த்த முடியும் என மத்திய அரசு நம்புகிறது.

    இந்தியாவின் ஆத்மநிர்பர் பாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயுத அமைப்புகளின் இறக்குமதியை தடை செய்வதும், அதே சமயம் உலகளவில் ஆயுத ஏற்றுமதியை தீவிரமாக சந்தைப்படுத்துவதும் அடங்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பாதுகாப்பு துறை
    அமெரிக்கா
    பிரான்ஸ்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இந்தியா

    டிவிஎஸ் மற்றும் ஹீரோவுக்கு போட்டி; என்125 என்ற புதிய பல்சர் மாடலை அறிமுகம் செய்தது பஜாஜ் பஜாஜ்
    விரைவில் அப்ரண்டிஸ்ஷிப் இணைக்கப்பட்ட பட்டப்படிப்பு திட்டம் அறிமுகம்; வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டது யுஜிசி கல்வி
    ஹஸ்ரத் நிஜாமுதீன் அவுலியாவின் 721வது உர்ஸ் கொண்டாட்டம்; பிரதமர் மோடி வாழ்த்து அறிக்கை பிரதமர் மோடி
    மேம்படுத்தப்பட்ட மெரிடியன் எஸ்யூவியை ரூ.24.99 லட்சத்தில் அறிமுகப்படுத்துகிறது ஜீப் இந்தியா எஸ்யூவி

    பாதுகாப்பு துறை

    மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை விமானங்கள் விமானம்
    இந்தியாவின் மேல் பறந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் இந்தியா
    நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் தர்மேந்திராவின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மும்பை
    SCO பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்: ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார் இந்தியா

    அமெரிக்கா

    குவாட் மற்றும் ஐநா சபை கூட்டங்களில் பங்கேற்க மூன்று நாள் பயணமான அமெரிக்கா கிளம்பினார் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    அதிர்ச்சி; வாஷிங்டனில் இந்திய தூதரக அதிகாரி மர்ம மரணம் இந்தியா
    அமெரிக்காவின் பிரபல ஹோட்டல் நிறுவனத்தை $525 மில்லியனுக்கு விலைக்கு வாங்குகிறது ஓயோ ஹோட்டல்
    பாதுகாப்பு குறைபாடு காரணமாக 4.5 லட்சம் வாகனங்களை திரும்பப் பெறும் ஜெனரல் மோட்டார்ஸ் ஜெனரல் மோட்டார்ஸ்

    பிரான்ஸ்

    மெட்ரோவில் இருந்து திரையரங்குகள் வரை: பாரிஸ் நகரத்தை வாட்டி வதைக்கும் மூட்டை பூச்சிகள் பாரிஸ்
    புதிய லோகோவுடன் புதுப்பொலிவு பெறும் ஏர் இந்தியா விமானங்கள் ஏர் இந்தியா
    அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு   அமெரிக்கா
    பிரான்ஸில் ஐபோனின் 12ன் கதிர்வீச்சு வெளியீட்டு அளவீடு பிரச்சினையை சமாளிக்க புதிய மென்பொருள் அப்டேட்டை வெளியிடும் ஆப்பிள் ஆப்பிள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025