NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / தமிழகத்தில் ரூ.1,600 கோடி மதிப்பில் உருவாகும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் ரூ.1,600 கோடி மதிப்பில் உருவாகும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது
    தமிழகத்தில் ரூ.1,600 கோடி மதிப்பில் உருவாகும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது

    தமிழகத்தில் ரூ.1,600 கோடி மதிப்பில் உருவாகும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jul 31, 2023
    03:33 pm

    செய்தி முன்னோட்டம்

    ஃபாக்ஸ்கான் குழும நிறுவனங்களுள் ஒன்றான ஃபாக்ஸ்கான் இன்டஸ்ட்ரியல் இன்டர்னெட் நிறுவனம் (FII) மற்றும் தமிழக அரசிடையே, புதிய மின்னணு தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றை அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியிருக்கிறது.

    ஃபாக்ஸ்கானின் ஆப்பிள் ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று ஏற்கனவே சென்னையில் இயங்கி வரும் நிலையில், சென்னைக்கு அருகில் உள்ள காஞ்சிபுரத்தில் புதிய மின்னணு தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றை அமைக்கத் திட்டமிட்டிருக்கிறது FII.

    இந்த புதிய தொழில்சாலையானது சென்னை ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையிலிருந்து தனித்து இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் செமிகண்டக்டர் மாநாட்டுக்காக இந்தியா வந்திருக்கும் ஃபாக்ஸ்கான் குழுமத் தலைவர் யங் லியு மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.

    தமிழ்நாடு

    காஞ்சிபுரத்தில் உருவாகும் புதிய ஃபாஸ்கான் குழும நிறுவன தொழிற்சாலை: 

    இந்த புதிய தொழிற்சாலையானது சுமார் ரூ.1,600 கோடி மதிப்பில் உருவாக்கப்படவிருக்கிறது. இந்தப் புதிய தொழிற்சாலை மூலம் 6,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனத் தெரிவித்திருக்கிறது தமிழக அரசு.

    ஃபாக்ஸ்கான் குழும நிறுவனமான FII நிறுவனமானது, மின்னணு சாதன தயாரிப்பு, கிளவுடு சேவை உபகரணத் தயாரிப்பு மற்றும் தொழிற்சாலை எந்திரங்களைத் தயாரித்து வருகிறது.

    புதிதாக கட்டமைக்கப்படவிருக்கும் இந்த தொழிற்சாலையில் என்ன தயாரிப்பை அந்நிறுவனம் மேற்கொள்ளவிருக்கிறது என்பது தொடர்பான விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இதன் கட்டமைப்பை 2024-ம் ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

    "தமிழகத்தை ஆசியாவின் வளர்ந்து வரும் மின்னணு சாதன தயாரிப்பு மையமாக மாற்றும் லட்சியத்தில் அடுத்த மைல்கல் இந்த ஒப்பந்தம்." என இந்த ஒப்பந்தம் குறித்து ட்வீட் செய்திருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

    ட்விட்டர் அஞ்சல்

    ஃபாக்ஸ்கான் ஒப்பந்தம் குறித்த முதல்வர் ஸ்டாலினின் ட்வீட்:

    Was delighted to meet the Foxconn Group Chairman Mr.Young Liu and his team. Various investment opportunities in Tamil Nadu were discussed. Investment commitment to establish a mobile component manufacturing facility in Kancheepuram district for Rs. 1600 crore with a potential… https://t.co/QhP0UI86od

    — M.K.Stalin (@mkstalin) July 31, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    வணிகம்
    தமிழக அரசு
    ஸ்டாலின்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    தமிழ்நாடு

    தக்காளியின் விலை திடீர் சரிவு - வரத்து அதிகரிப்பு  சென்னை
    நீட் தேர்வு: மீண்டும் மீண்டும் தேர்வு எழுதுவோரின் ஆதிக்கம் நீட் தேர்வு
    தமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் அறிவிப்பு  மு.க ஸ்டாலின்
    தமிழகத்தில் விலைவாசி உயர்வினை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்  திமுக

    வணிகம்

    புதிய சுற்றுப் பணிநீக்கத்தில், 276 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த மைக்ரோஃசாப்ட்  மைக்ரோசாஃப்ட்
    ஆப்பிள் ஐபோன் தயாரிப்பில் ஈடுபடும் முதல் இந்திய நிறுவனமாகவிருக்கும் டாடா டாடா
    இன்ஸ்டாகிராம் மூலமாக இரயிலில் உணவு டெலிவரி! அசத்தும் தனியார் சேவை நிறுவனம்! ரயில்கள்
    தனியாக செமிகண்டக்டர் தொழிற்சாலை ஒன்றை அமைக்கவிருப்பதாக அறிவித்த ஃபாக்ஸ்கான் இந்தியா

    தமிழக அரசு

    செந்தில் பாலாஜி கைது எதிரொலி: CBI க்கு தமிழக அரசு வைத்த செக்  தமிழ்நாடு
    சென்னை கிண்டி மருத்துவமனை: இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைக்கிறார் சென்னை
    தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடை மாற்றம்  தமிழ்நாடு
    சீல் வைக்கப்பட்ட விழுப்புரம் திரெளபதி அம்மன் கோயில் விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு  விழுப்புரம்

    ஸ்டாலின்

    சென்னையில் ஆளுநருக்கு எதிரான போஸ்டர்கள் திமுக
    குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளைக் கலந்த சம்பவம்: சட்டப்பேரவையில் முதல்வர் பேச்சு தமிழ்நாடு
    சேது சமுத்திரம் திட்டம் தமிழக சட்டபேரவையில் ஒரு மனதாக நிறைவேறியது தமிழ்நாடு
    வேங்கை வயலில் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டும் போலீஸ்: பா. ரஞ்சித் குற்றசாட்டு பா ரஞ்சித்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025