NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / செபியின் புதிய விதிமுறைகளால் பங்குசந்தை ப்ரோக்கர்கள் அதிக கட்டணம் வசூலிக்க நேரிடும்: ஜீரோதா CEO 
    அடுத்த செய்திக் கட்டுரை
    செபியின் புதிய விதிமுறைகளால் பங்குசந்தை ப்ரோக்கர்கள் அதிக கட்டணம் வசூலிக்க நேரிடும்: ஜீரோதா CEO 

    செபியின் புதிய விதிமுறைகளால் பங்குசந்தை ப்ரோக்கர்கள் அதிக கட்டணம் வசூலிக்க நேரிடும்: ஜீரோதா CEO 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 02, 2024
    05:41 pm

    செய்தி முன்னோட்டம்

    பங்குச் சந்தைகள், டெபாசிட்டரி பங்கேற்பாளர்கள் மற்றும் க்ளியரிங் உறுப்பினர்களால் விதிக்கப்படும் கட்டணங்கள் வெளிப்படையாகவும் ஒரே மாதிரியாகவும் இருக்க வேண்டும் என்று இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்(செபி) நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், இது குறித்து இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜீரோதா நிறுவனத்தின் CEO நிதின் காமத், "ஒன்று, ஜீரோ ப்ரோக்கரேஜ் என்ற கொள்கையை கைவிட வேண்டி இருக்கும் அல்லது பங்கு வர்த்தகங்களுக்கான ப்ரோக்கர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டி இருக்கும்." என்று கூறியுள்ளார்.

    ஜீரோதா என்பது பங்கு வர்த்தகம் செய்ய உதவும் பிரபலமான ப்ரோக்கரேஜ் தளமாகும்.

    ப்ரோக்கர் கட்டணம் உயர்த்தப்பட்டால் அது பங்கு சந்தை ப்ரோக்கர்கள், வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களை கடுமையாக பாதிக்கும்.

    இந்தியா 

    ஜீரோதா நிறுவனத்தின் CEO நிதின் காமத் கூறியிருப்பதாவது: 

    பங்குச் சந்தைகள் போன்ற அனைத்து சந்தை உள்கட்டமைப்பு நிறுவனங்களும் கட்டணம் வசூலிக்கும் விதத்தில் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று செபி கூறியுள்ளது.

    இந்த சுற்றறிக்கை பங்கு சந்தை ப்ரோக்கர்கள், வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    ஒரு வர்த்தகர் செய்யும் ஒட்டுமொத்த விற்றுமுதல் அடிப்படையில் பரிவர்த்தனை கட்டணங்களை பங்குச் சந்தை ப்ரோக்கர் நிறுவனங்கள் வசூலிக்கின்றன.

    ப்ரோக்கர்கள் வாடிக்கையாளரிடம் என்ன கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பதற்கும், மாத இறுதியில் ப்ரோக்கர்களிடம் இருந்து பங்குசந்தை எவ்வளவு வசூலிக்கிறது என்பதற்கும் உள்ள வித்தியாசம் கடைசியில் ப்ரோக்கர்களுக்கே கிடைக்கும்.

    இந்த தள்ளுபடிகள் எங்கள் வருவாயில் சுமார் 10% ஆகும். புதிய சுற்றறிக்கையால், இந்த வருமானம் போய்விடும். எனவே, வர்த்தகர்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிக்க நேரிடும்.

    ட்விட்டர் அஞ்சல்

    ஜீரோதா நிறுவனத்தின் CEO நிதின் காமத்தின் பதிவு 

    SEBI issued a new circular mandating all market infrastructure institutions, like stock exchanges, to be "true to the label" in how they levy charges. This circular has a significant impact on brokers, traders, and investors.

    Stock exchanges charge transaction fees based on the…

    — Nithin Kamath (@Nithin0dha) July 2, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பங்குச் சந்தை
    செபி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பங்குச் சந்தை

    காலாண்டு முடிவுகள்.. பங்குச்சந்தையில் சரிவைச் சந்தித்த டிசிஎஸ்!  வணிக செய்தி
    காலாண்டு முடிவுகளை வெளியிட்டது இன்ஃபோசிஸ்!  வணிக செய்தி
    பங்குசந்தையில் கடும் சரிவைச் சந்தித்த இன்ஃபோசிஸ்  வணிக செய்தி
    பங்குச்சந்தையில் இன்ஃபோசிஸ் வீழ்ச்சி.. 500 கோடி சொத்து மதிப்பை இழந்த ரிஷி சுனக்கின் மனைவி!  இன்ஃபோசிஸ்

    செபி

    சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் மரணம்: 3 கோடி மக்களின் 25,000 கோடி ரூபாயின் நிலைமை என்ன? இந்தியா
    'உண்மை வென்றது': செபி விசாரணையை மாற்ற உச்ச நீதிமன்றம் மறுத்ததை அடுத்து கௌதம் அதானி பேச்சு  அதானி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025