NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / புழுங்கல் அரிசியை தொடர்ந்து பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதித்தது மத்திய அரசு
    புழுங்கல் அரிசியை தொடர்ந்து பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதித்தது மத்திய அரசு
    வணிகம்

    புழுங்கல் அரிசியை தொடர்ந்து பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதித்தது மத்திய அரசு

    எழுதியவர் Sekar Chinnappan
    August 27, 2023 | 01:12 pm 1 நிமிட வாசிப்பு
    புழுங்கல் அரிசியை தொடர்ந்து பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதித்தது மத்திய அரசு
    புழுங்கல் அரிசியை தொடர்ந்து பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதித்தது மத்திய அரசு

    ஒரு டன் 1200 டாலருக்கும் குறைவாக வெளிநாடுகளுக்கு விற்கப்படும் பாஸ்மதி அரிசி சரக்குகளின் ஏற்றுமதியை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. அதே நேரத்தில் அந்த விலை வரம்புக்கு மேல் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஏற்றுமதிகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்று அரசு வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை இந்தியாவின் பாஸ்மதி ஏற்றுமதியை கட்டுக்குள் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, 2022-2023ல் 4.79 பில்லியன் டாலர் மதிப்புள்ள பாஸ்மதி அரிசியை இந்தியா ஏற்றுமதி செய்திருந்தது. இதில் பெரும்பாலான ஏற்றுமதி மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டது. இதற்கிடையே, விலையை கட்டுக்குள் வைக்க, பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு தடை, புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு 20% கூடுதல் வரி போன்ற நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது.

    இந்திய தடையால் பாகிஸ்தானுக்கு லாபம்

    மொத்த நுகர்வோர் பணவீக்க விகிதம் 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு 7.44% ஆக அதிகரித்துள்ளதால், அதிக உணவுப் பணவீக்கத்தின் பின்னணியில் தானியங்கள் மீதான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளின் முழு வரம்பையும் அரசாங்கம் இப்போது நடைமுறைப்படுத்தியுள்ளது. புதிய விதிமுறைகள் பாஸ்மதி அரிசியின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை நிர்ணயம் செய்வதாக வர்த்தகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இது பாஸ்மதியை அதிகம் உற்பத்தி செய்யும் பாகிஸ்தானுக்கு கூடுதல் நன்மையை கொடுக்கும் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, இந்திய அரசின் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி கட்டுப்பாடு சர்வதேச அளவில் அரிசி விலையை மேலும் அதிகரிக்க செய்யும் எனக் கூறப்படுகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    மத்திய அரசு
    இந்தியா

    மத்திய அரசு

    புழுங்கல் அரிசி மீதான ஏற்றுமதி வரியை 20% அதிகரித்தது மத்திய அரசு இந்தியா
    மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி விருது 2022 - முதலிடம் பிடித்த கோவை  கோவை
    FAME II திட்டத்தின் கீழ் பெற்ற மானியத்தை திருப்பியளித்த ரிவோல்ட், ஏன்? எலக்ட்ரிக் பைக்
    டெல்லியில் ஜி20 மாநாடு நடப்பதையொட்டி மத்திய அரசு அலுவலகங்கள் 3 நாட்கள் மூடப்படும்  ஜி20 மாநாடு

    இந்தியா

    உலக சாம்பியன்ஷிப் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி உலக சாம்பியன்ஷிப்
    இந்தியாவில் மேலும் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு  கொரோனா
    சட்டம் பேசுவோம்: திருமண-பலாத்காரத்திற்கு எதிராக இந்தியாவில் சட்டங்கள் இல்லையா? சட்டம் பேசுவோம்
    தான்சானியா கபடி வீரர்களுக்கு பயிற்சியளிக்க பயிற்சியாளர்களை அனுப்பி வைத்தது இந்தியா கபடி போட்டி
    அடுத்த செய்திக் கட்டுரை

    வணிகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Business Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023