NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / புழுங்கல் அரிசியை தொடர்ந்து பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதித்தது மத்திய அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    புழுங்கல் அரிசியை தொடர்ந்து பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதித்தது மத்திய அரசு
    புழுங்கல் அரிசியை தொடர்ந்து பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதித்தது மத்திய அரசு

    புழுங்கல் அரிசியை தொடர்ந்து பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதித்தது மத்திய அரசு

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 27, 2023
    01:12 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒரு டன் 1200 டாலருக்கும் குறைவாக வெளிநாடுகளுக்கு விற்கப்படும் பாஸ்மதி அரிசி சரக்குகளின் ஏற்றுமதியை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

    அதே நேரத்தில் அந்த விலை வரம்புக்கு மேல் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஏற்றுமதிகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்று அரசு வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நடவடிக்கை இந்தியாவின் பாஸ்மதி ஏற்றுமதியை கட்டுக்குள் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, 2022-2023ல் 4.79 பில்லியன் டாலர் மதிப்புள்ள பாஸ்மதி அரிசியை இந்தியா ஏற்றுமதி செய்திருந்தது.

    இதில் பெரும்பாலான ஏற்றுமதி மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டது.

    இதற்கிடையே, விலையை கட்டுக்குள் வைக்க, பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு தடை, புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு 20% கூடுதல் வரி போன்ற நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது.

    India controls basmati rice export

    இந்திய தடையால் பாகிஸ்தானுக்கு லாபம்

    மொத்த நுகர்வோர் பணவீக்க விகிதம் 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு 7.44% ஆக அதிகரித்துள்ளதால், அதிக உணவுப் பணவீக்கத்தின் பின்னணியில் தானியங்கள் மீதான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளின் முழு வரம்பையும் அரசாங்கம் இப்போது நடைமுறைப்படுத்தியுள்ளது.

    புதிய விதிமுறைகள் பாஸ்மதி அரிசியின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை நிர்ணயம் செய்வதாக வர்த்தகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    மேலும், இது பாஸ்மதியை அதிகம் உற்பத்தி செய்யும் பாகிஸ்தானுக்கு கூடுதல் நன்மையை கொடுக்கும் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே, இந்திய அரசின் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி கட்டுப்பாடு சர்வதேச அளவில் அரிசி விலையை மேலும் அதிகரிக்க செய்யும் எனக் கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    இந்தியா

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    மத்திய அரசு

    போலி மருந்துகளை அடையாளம் காண, இன்று முதல் அமலாகிறது QR கோட் இந்தியா
    இந்தியாவில் பயில வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கான புதிய வலைதளம் அறிமுகம்  இந்தியா
    'என்னை வீட்டுக் காவலில் வைத்திருக்கிறார்கள்': ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி ஜம்மு காஷ்மீர்
    85% பேர் பழைய வருமான வரிமுறையையே தேர்ந்தெடுத்திருப்பதாக புதிய அறிக்கையில் தகவல் வருமான வரி விதிகள்

    இந்தியா

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 23 தங்கம் வெள்ளி விலை
    தென்னாப்பிரிக்காவில் இருந்து சந்திரயான்-3 தரையிறங்குவதை பார்வையிட இருக்கிறார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    மிசோரத்தில் ரயில்வே பாலம் இடிந்து விபத்து: 17 பேர் பலி நரேந்திர மோடி
    'உலகின் மிக முக்கியமான நாடு இந்தியா தான்': அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025