NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / பிரதம மந்திரி விஷ்வகர்மா திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த அமைச்சரவைக் குழு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரதம மந்திரி விஷ்வகர்மா திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த அமைச்சரவைக் குழு
    பிரதம மந்திரி விஷ்வகர்மா திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த அமைச்சரவைக் குழு

    பிரதம மந்திரி விஷ்வகர்மா திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த அமைச்சரவைக் குழு

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 16, 2023
    05:00 pm

    செய்தி முன்னோட்டம்

    அடுத்த மாதம் விஷ்வகர்மா ஜெயந்தியின் போது, புதிய விஷ்வகர்மா திட்டத்தை தொடங்கவிருப்பதாக நேற்று செங்கோட்டையில் சுதந்திர தின உரையில் தெரிவித்திருந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

    இந்நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது இந்தப் புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது.

    அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.13,000 கோடி மதிப்பீடு செய்யப்பட்டிருக்கும் இந்தத் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 18 வகையான தொழிலைச் செய்பவர்களும் அவர்களது குடும்பத்தினரும் பலனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் தொழில்களுக்கு சான்றிதழ்கள், அடையாள அட்டைகள், கடன் வசதி உள்ளிட்டவை வழங்கப்படவிருக்கின்றன.

    இந்தியா

    பிரதம மந்திரி விஷ்வகர்மா திட்டம்: 

    இந்தத் திட்டத்தின் கீழ், 5% என்ற குறைவான வட்டி வகிதத்தில் முதலில் ரூ.1 லட்சம் வரையிலான கடனுதவியும், பின்னர் ரூ.2 லட்சம் வரையிலான கடனுதவியும் வழங்கப்படவிருக்கிறது.

    மேலும், ஒருவர் தன்னுடைய தொழில்திறனை முன்னேற்றுவதற்குத் தேவயான பயிற்சிகள், தொழிலுக்கு தேவயான கருவிகளை வாங்குவதற்காக ஊக்கத்தொகை, டிஜிட்டல் பணப்பரிமாற்றத்திற்கான ஊக்கத்தொகை மற்றும் சந்தைப்படுத்துதலுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்படவிருக்கின்றன.

    முதல் கட்டமாக, இந்த விஷ்வகர்மா திட்டத்தின் கீழ், தச்சர்கள், படகு தயாரிப்பாளர்கள், கொல்லர்கள், பூட்டுத் தொழிலாளர்கள், பொற்கொல்லர்கள், குயவர்கள், சிற்பிகள், செருப்புத் தொழிலாளர்கள் மற்றும் கொத்தனார்கள் உள்ளிட்டோர் பயனடையவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    பிரதமர் மோடி

    ரிசர்வ் வங்கியுடன் இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட UAE-யின் சென்ட்ரல் வங்கி ரிசர்வ் வங்கி
    'குடும்பத்தால், குடும்பத்திற்காக': எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய பிரதமர் மோடி  எதிர்க்கட்சிகள்
    அனைத்து கட்சி கூட்டம் - அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகன் பங்கேற்பு  நாடாளுமன்றம்
    "மணிப்பூர் சம்பவம் நாட்டிற்கே வெட்கக்கேடு; குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவர்": பிரதமர் மோடி மணிப்பூர்

    இந்தியா

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 11 தங்கம் வெள்ளி விலை
    இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தலுக்கு மீண்டும் தற்காலிக தடை மல்யுத்தம்
    77வது சுதந்திர தினம், இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-பகுதி 1 ரஷ்யா
    இந்திய கொரோனா நிலவரம்: ஒரே நாளில் 38 பேருக்கு பாதிப்பு கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025