NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / பங்குச்சந்தையில் 20% வரை உயர்வைச் சந்தித்து வரும் அதானி குழுமப் பங்குகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பங்குச்சந்தையில் 20% வரை உயர்வைச் சந்தித்து வரும் அதானி குழுமப் பங்குகள்
    பங்குச்சந்தையில் 20% வரை உயர்வைச் சந்தித்து வரும் அதானி குழுமப் பங்குகள்

    பங்குச்சந்தையில் 20% வரை உயர்வைச் சந்தித்து வரும் அதானி குழுமப் பங்குகள்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Nov 28, 2023
    02:08 pm

    செய்தி முன்னோட்டம்

    அதானி- ஹின்டன்பர்க் விவகாரம் தொடர்பான விசாரணைகள் உச்சநீதிமன்றத்தில் நிறைவடைந்திருப்பதையடுத்து, அதானி குழுமப் பங்குகளின் விலைகள் இன்று ஏற்றத்தைச் சந்தித்து வருகின்றன.

    அதானி குழும நிறுவனங்கள் பல்வேறு குளறுபடிகளில் ஈடுபடுவதாகக் கூறி இந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஹின்டன்பர்க்.

    அந்த அறிக்கையின் அடிப்படையில் அதானி குழுமங்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், ஹின்டன்பர்க் அறிக்கையில் உள்ள உண்மைத்தன்மை குறித்து விசாரணை மேற்கொள்ள இந்தியாவின் பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணையமான செபிக்கு உத்தவிட்டது உச்சநீதிமன்றம்.

    செபியும் அதானி-ஹின்டன்பர்க் தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்திருப்பதாகத் தெரிவித்திருப்பதோடு, கூடுதல் அவகாசம் எதுவும் தேவையில்லை எனவும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    வணிகம்

    உயர்ந்த அதானி குழுமப் பங்குகளின் விலைகள்: 

    அதானி குழும முறைகேடு குறித்து ஹின்டன்பர்க் அறிக்கை வெளியான போது, அதானி குழுமப் பங்குகளின் விலைகள் பல வாரங்களாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்தன.

    தங்களது குழும நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டது அதானி குழுமம். தற்போது வழக்கு விசாரணைகள் நிறைவடந்திருக்கும் நிலையில், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனப் பங்குகளின் விலை இன்று 11% வரை உயர்ந்திருக்கிறது.

    அதேபோல், அதானி டோட்டஸ் கேஸ் பங்கின் விலை 20%-மும், அதானி க்ரீன் எனர்ஜியின் விலை 15%-மும் அதிகரித்திருக்கிறது.

    பிற அதானி குழும நிறுவனங்களான NDTV, அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ACC உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு விலைகளும் கணிசமான அளவில் உயர்வைச் சந்தித்திருக்கின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அதானி
    பங்குச் சந்தை
    வணிகம்
    பங்கு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    அதானி

    கவுதம் அதானியை பின்தள்ளி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் முகேஷ் அம்பானி முகேஷ் அம்பானி
    மஹுவா மொய்த்ரா கேள்வி கேட்க பணம் வாங்கியது உண்மைதான்- தொழிலதிபர் அதிரடி பிரதமர்

    பங்குச் சந்தை

    அதானி குழுமத்தில் செய்த முதலீட்டில் இழப்பு ஏதும் இல்லை: LIC இந்தியா
    அதானி குழும பிரச்சனை: பங்குகள் சரிவடைந்தற்கு பதிலளித்த நிதியமைச்சர் இந்தியா
    அதானி பங்குகள் மீண்டும் சரிவு! காரணம் என்ன? தொழில்நுட்பம்
    அதானி பங்குகளில் முதலீட்டை அதிகரித்திருக்கும் எல்ஐசி!  முதலீடு

    வணிகம்

    சிவகங்கை காளையார்கோவிலில் ரோமானிய நாணயம் கண்டெடுப்பு  சிவகங்கை
    அதிக நன்கொடை அளித்த இந்தியர்கள் பட்டியலில் மூன்றாவது ஆண்டாக முதலிடம் பிடித்திருக்கும் ஷிவ் நாடார் இந்தியா
    இந்தியாவில் அதிகரித்த ஐபோன் விற்பனை.. முதலீட்டாளர் கலந்துரையாடலில் டிம் குக் ஆப்பிள்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 3 தங்கம் வெள்ளி விலை

    பங்கு

    IPO வெளியீட்டிற்கு விண்ணப்பித்திருக்கும் மேன்கைண்டு பார்மா! ஐபிஓ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025